சென்னையில் கட்டுக்குள் கொரோனா.. அண்டை மாவட்டங்களில் அதிகரிப்பு.. கோவை, சேலத்தில் கிடுகிடு உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் நிலவரம் கட்டுக்குள் இருந்தாலும், அண்டை மாவட்டங்கள் மற்றும் கோவை, சேலத்தில் அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியான நிலவரம் இதோ: சென்னை-1,177, செங்கல்பட்டு-462, திருவள்ளூர்-393, கோவை-397, சேலம்-359, காஞ்சிபுரம்-291, கடலூர்-270, தேனி-233,
நெல்லை-176, விருதுநகர்-147, ராணிப்பேட்டை-145, திண்டுக்கல்-134, தென்காசி-132, திருச்சி-128, வேலூர்-124, கன்னியாகுமரி-123, தஞ்சை-117,
திருவண்ணாமலை 109, புதுக்கோட்டை-102, விழுப்புரம்-97 இவ்வாறு பதிவாகியுள்ளது.
இதேபோல, மதுரை-89, ஈரோடு-86, திருப்பத்தூர்-84, தூத்துக்குடி-82, திருப்பூர்-68, கள்ளக் குறிச்சி-65, திருவாரூர்- 62, நீலகிரி -60, ராமநாதபுரம்- 49, நாமக்கல்-46, சிவகங்கை-46, அரியலூர்-38, கரூர்-32, பெரம்பலூர்-27, நாகை-19, தர்மபுரி-6, கிருஷ்ணகிரி-5 இவ்வாறு இன்றைய மாவட்ட நிலவரம் பதிவாகியுள்ளது.
கட்டுக்கடங்காத கொரோனா.. தமிழகத்தில் மேலும் 5986 பேர் பாதிப்பு.. 116 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,076 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 39.88 லட்சத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.