புதிய பணியிடம், அரசு நிதியில் வெளிநாட்டு டூர், விருது நிகழ்ச்சி..அத்தனைக்கும் தமிழக அரசு தடாலடி தடா
சென்னை: கொரோனா லாக்டவுனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிகட்டும் வகையில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு தடை உள்ளிட்ட அதிரடி சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு சிக்கன நடவடிக்கைகளுக்காக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- புதிய ப ணியிடங்களை உருவாக்கி நியமனம் செய்யக் கூடாது
- ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தடை இல்லை
- அரசின் மொத்த செலவில் 20%-த்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
- அரசு நடத்தும் விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
- விமானங்களில் உயர் வகுப்பில் அரசு அதிகாரிகள் பயணிக்க அனுமதி இல்லை.
- பிற மாநிலங்களுக்கு விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணம்தான் வழங்கப்படும்.
- அரசு செலவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதி கிடையாது.
- அரசின் விளம்பர செலவுகளில் 25% குறைக்க வேண்டும்.
- அலுவலக உபகரணங்கள் கொள்முதலில் 50% வரை குறைப்பு தேவை.
- அரசு பணத்திலான அனைத்து விருந்துகளும் இனி கிடையஅது.
சுகாதாரம், தீயணைப்பு துறைகளுக்கு மட்டும் உபகரண கொள்முதலுக்கு அனுமதி
ஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்
இவ்வாறு தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
English summary
The Tamil Nadu government has imposed a complete ban on creation of new posts in all the departments.
Story first published: Thursday, May 21, 2020, 23:56 [IST]