பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி சதவீதத்தில் முதல் மாவட்டம், கடைசி மாவட்டம் எது தெரியுமா?
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் எந்த மாவட்டம் முதலிடத்தை பிடித்திருக்கிறது, எந்த மாவட்டம் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது தெரியுமா?
Recommended Video
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தேர்வு முடிவை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தை பெரம்பலூர் மாவட்டம் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்தடுத்த இடத்தில் விருதுநகர் (97.27%), ராமநாதபுரம் (97.02%) உள்ளது.

தேர்ச்சி சதவீதம்
அது போல் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடம் வேலூருக்கு! இங்கு 86.69 சதவீதம் ஆகும். பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்.

மதிப்பெண் பட்டியல்
மதிப்பெண் பட்டியல்கள் வெளியான பின்னர் மாணவர்கள் பொறுமையாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியாக உள்ளது. மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தேர்ச்சி
2020ஆம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 93.76% ஆக உயர்ந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 89.06% அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு உதவிபெறும் பள்ளிகள் 94.87% தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.15% முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள்
தேர்வெழுதிய 3,095 மாற்றுத் திறனாளிகளின் 2,824 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 74 சிறைவாசி மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 71 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 634 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடம்
வேதியியல் பாடத்தில் 1500 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 1541 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 1858 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் 47 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். விலங்கியல் பாடத்தில் 22 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 3827பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வணிகவியல் பாடம்
வணிகவியல் பாடத்தில் 4634 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 4540 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பொருளியல் பாடத்தில் 1146 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிகப் பயன்பாடு பாடத்தில் 2818பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 1151 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications