கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் கொடுங்க.. நிர்மலா சீதாராமனிடம் கோரிய தங்கம் தென்னரசு!
டெல்லி: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு தனது பங்குத் தொகையான ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும், அமெரிக்கா வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரி சலுகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த மத்திய பட்ஜெட் தயாரிப்பின் ஒரு பகுதியாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழக அரசு சார்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். அப்போது தமிழக தேவைகள் மற்றும் பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டது.

இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சென்னை மெட்ரோ திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு தொகையான ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும். அதேபோல் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களை மறுபரிசீலனை செய்து மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில் 31 சதவிகிதம் அமெரிக்காவுடன் நடைபெறுகிறது.
அதனால் அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிச் சலுகை வழங்க வேண்டும். ஜவுளித்துறைக்கான பிரத்யேக ஆதரவு தொகுப்பை அறிவித்திட மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அதேபோல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் தர வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் 2024-25, 2025-26 ஆகிய இரு ஆண்டுகளுக்கான சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் ரூ.3,548 கோடியை நிபந்தனையின்றி மத்திய அரசு விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி சீரமைப்பினால் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். மாநில அரசுகள் எதிர்கொள்ளும் வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்கான ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி -ஒசூர் புதிய இருப்புப்பாதை வழித்தடத்துக்கு அனுமதி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேக திட்டங்களை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications