ஹரிஜன் என ஜாதிவெறி பேச்சு.. ஜனநாயகத்தை ஏற்று செயல்படுவதால்தான் ஆளுநர் நடமாட முடிகிறதாம்: வன்னி அரசு
சென்னை: தலித்துகளை ஹரிஜன் என தடை செய்யப்பட்ட சொல்லை பயன்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது ஜாதிவெறிதான்; விடுதலை சிறுத்தைகள் ஜனநாயகத்தை ஏற்று செயல்படுவதால்தான் ஆளுநர் இன்று தமிழகத்தில் நடமாட முடிகிறது என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தலித்துகளின் கல்வி நிலை பற்றி குறிப்பிட்டார். அப்போது தலித்துகள் என்ற வார்த்தைக்குப் பதில் ஹரிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

ஹரிஜன் சொல்லுக்கு தடை
ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு 1982-ம் ஆண்டு தடை விதித்துவிட்டது. ஆதி திராவிடர்கள், பட்டியலின மக்கள், தலித்துகள் என்றே அழைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் திடீரென ஹரிஜன் என்ற சொல்லை ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

திருமாவளவன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமது கண்டன அறிக்கையில், ஹரிஜன் என்றால் அப்பன் பெயர் தெரியாதவன் என பொருள். தடை செய்யப்பட்ட சொல்லை தமிழக ஆளுநர் பயன்படுத்தியது கடும் கண்டனத்துக்குரியது என்றார். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எச்.ராஜா ட்விட்டர்
இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தொடர்பான ட்விட்டர் பதிவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் நேற்று ஹரிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், ஆங்கிலேயரை எதிர்த்து நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் ஹரிஜன மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தபோது அதை ஏற்று ஹரிஜன மக்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன்; ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என ஒரு துண்டு பிரசுரம் மூலம் தெரிவித்து ஆலய பிரவேசத்தினை அமைதியாக நடத்திய பெரியவர் திரு.பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் தியாகத்தையும் சேவையும் வீரத்தையும் போற்றுவோம் என கூறியிருந்தார் எச்.ராஜா. இதற்கு அவரது ட்விட்டர் பக்கத்திலேயே கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

ஆளுநருக்கு வன்னி அரசு வார்னிங்
இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பங்கேற்றார். அதில் பேசிய வன்னி அரசு, ஆளுநர் ஹரிஜன் என்ற சொல்லை ஜாதிவெறியோடு பேசி இருக்கிறார். ஆதி திராவிடர் என சொல்லை பயன்படுத்த அவர் விரும்பவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜனநாயகத்தை ஏற்று செயல்படுகிறது. அதனால்தான் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியால் நடமாட முடிகிறது என்றார் வன்னி அரசு.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications