ஹரிஜன் என ஜாதிவெறி பேச்சு.. ஜனநாயகத்தை ஏற்று செயல்படுவதால்தான் ஆளுநர் நடமாட முடிகிறதாம்: வன்னி அரசு
சென்னை: தலித்துகளை ஹரிஜன் என தடை செய்யப்பட்ட சொல்லை பயன்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது ஜாதிவெறிதான்; விடுதலை சிறுத்தைகள் ஜனநாயகத்தை ஏற்று செயல்படுவதால்தான் ஆளுநர் இன்று தமிழகத்தில் நடமாட முடிகிறது என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தலித்துகளின் கல்வி நிலை பற்றி குறிப்பிட்டார். அப்போது தலித்துகள் என்ற வார்த்தைக்குப் பதில் ஹரிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

ஹரிஜன் சொல்லுக்கு தடை
ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு 1982-ம் ஆண்டு தடை விதித்துவிட்டது. ஆதி திராவிடர்கள், பட்டியலின மக்கள், தலித்துகள் என்றே அழைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் திடீரென ஹரிஜன் என்ற சொல்லை ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

திருமாவளவன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமது கண்டன அறிக்கையில், ஹரிஜன் என்றால் அப்பன் பெயர் தெரியாதவன் என பொருள். தடை செய்யப்பட்ட சொல்லை தமிழக ஆளுநர் பயன்படுத்தியது கடும் கண்டனத்துக்குரியது என்றார். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எச்.ராஜா ட்விட்டர்
இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தொடர்பான ட்விட்டர் பதிவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் நேற்று ஹரிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், ஆங்கிலேயரை எதிர்த்து நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் ஹரிஜன மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தபோது அதை ஏற்று ஹரிஜன மக்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன்; ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என ஒரு துண்டு பிரசுரம் மூலம் தெரிவித்து ஆலய பிரவேசத்தினை அமைதியாக நடத்திய பெரியவர் திரு.பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் தியாகத்தையும் சேவையும் வீரத்தையும் போற்றுவோம் என கூறியிருந்தார் எச்.ராஜா. இதற்கு அவரது ட்விட்டர் பக்கத்திலேயே கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

ஆளுநருக்கு வன்னி அரசு வார்னிங்
இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பங்கேற்றார். அதில் பேசிய வன்னி அரசு, ஆளுநர் ஹரிஜன் என்ற சொல்லை ஜாதிவெறியோடு பேசி இருக்கிறார். ஆதி திராவிடர் என சொல்லை பயன்படுத்த அவர் விரும்பவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜனநாயகத்தை ஏற்று செயல்படுகிறது. அதனால்தான் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியால் நடமாட முடிகிறது என்றார் வன்னி அரசு.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications