மதக்கலவரம் நடந்த இடங்களில் பாஜக ஆட்சி.. அது தமிழ்நாட்டில் நடக்காது.. அழுத்தி சொன்ன பீட்டர் அல்போன்ஸ்
நெல்லை: நாட்டில் எங்கெல்லாம் மதக்கலவரம் நடந்து முடிந்ததோ அங்கெல்லாம் பாஜக தான் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அது தமிழ்நாட்டில் நடக்காது என்று சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை போதவில்லை, மெத்தன போக்குடன் செயல்பட்டதாக பாஜக மற்றும் ஆளுநர் ஆர்என் ரவி ஆகியோர் குற்றம்சாட்டினர்.
ஆளுநரின் நேரடி குற்றச்சாட்டுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேரடியாக கண்டனம் தெரிவித்ததோடு, ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் கடிதம் அளிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு உதவி
இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆளுநர் விவகாரம், பாஜகவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கருத்து தெரிவித்தார். இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் மட்டும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.7.11 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையின மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வியல் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து சரி செய்து வருகிறோம். இதுவரை 16 மாவட்டங்களை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

ஆளுநர் செயல்பாடுகள்
தொடர்ந்து ஆளுநர் ஆர் என் ரவியின் செயல்பாடுகாள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். இது அவரின் பதவிக்கு ஒவ்வாத செயல். தமிழக அரசுக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும். அண்ணாமலை, ஆளுநர் இருவரும், தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றவும், வெறுப்பு அரசியலை செய்யவும் முயற்சிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நடக்காது
மத்திய அரசு பின்னால் இருந்து இந்த வேலைகளை செய்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. கேரளா, தமிழ்நாடுஅரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்கள் தங்களின் செயல்பாடுகளை கைவிட வேண்டும். எங்கெல்லாம் மதக்கலவரம் நடந்து முடிந்ததோ அங்கெல்லாம் பாஜக தான் ஆட்சிக்கு வந்துள்ளது. அது தமிழ்நாட்டில் நடக்காது என்று தெரிவித்தார்.

இலங்கை தமிழர்கள்
தொடர்ந்து, 50 ஆண்டுகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இருப்பது மிகப்பெரிய அவமானம். இடஒதுக்கீடு என்பது அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய சமூக அநீதி என்று தெரிவித்தார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications