செல்போன் மூலம் கொரோனாவுக்கான ஸ்வாப் சேம்பிளை கலெக்ட் செய்யும் ரோபோ.. கோவை இளைஞரின் செம வடிவமைப்பு
கோவை: கொரோனா வைரஸுக்கான பரிசோதனை நேரடியாக எடுக்கப்படுவதால் அதன் பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில் ரோபோ மூலம் தொண்டை சளி மாதிரியை எடுக்கும் கருவியை கோவை இளைஞர் கார்த்தி வேலாயுதம் உருவாக்கியுள்ளார்.
Recommended Video
பொதுவாக கொரோனா வைரஸை கண்டறிய தொண்டையில் உள்ள சளி மாதிரியையும் மூக்கினுள் உள்ள சளி மாதிரியையும் காது குடையும் பட்ஸ் போல் பஞ்சு சுற்றப்பட்ட ஒரு குச்சியில் எடுத்து சோதனை செய்வது வழக்கம்.
இவ்வாறு சோதனை செய்யும் போது சுகாதாரத் துறை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க், கை உறை ஆகியவற்றை அணிந்து கொண்டிருப்பார். அவ்வாறு செய்யும் போது கிருமி தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.

கைகளை வெளியே நீட்டி
இதையடுத்து கண்ணாடி சுவர் எழுப்பப்பட்ட ஒரு அறையில் வெளிப்புறமாக கைகளை போல் வடிவமைக்கப்பட்ட ரப்பர் கிளவுஸில் கைகளை விட்டபடி வெளியே இருக்கும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதி வந்துள்ளது. இதனால் சளி மாதிரி எடுப்போரின் எந்த உடல் பாகமும் கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருக்காது.

கியாஸ்க்
சுற்றிலும் கண்ணாடியால் கட்டமைக்கப்பட்டிருக்கும் கியாஸ்க் போன்ற ஒரு அறையாகும். இது பெரும்பாலான இடங்களில் வந்துவிட்டது. எனினும் இன்னும் பல இடங்களில் நேரடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலமும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

கிளவுஸ்
என்னதான் பாதுகாப்பு உபகரணங்கள், கிளவுஸ் போட்டிருந்தாலும் சுவாசிப்பதன் மூலம் அந்த கிருமி எளிதில் பரவும் என சொல்லப்படுகிறது. இதனால் கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரோபோ மூலம் சளி மாதிரியை எடுக்கும் கருவியை வடிவமைத்துள்ளார்.

ரூ 2000 செலவு
கோவையைச் சேர்ந்தவர் கார்த்தி வேலாயுதம். இவர் ரோபாட்டிக்ஸ் பொறியாளர். இவர்தான் அந்த ரோபோவை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ நோயாளியின் தொண்டை மாதிரியை சேகரிக்கும். இதை ஒரு ஸ்மார்ட் போன் செயலி மூலம் இயக்கலாம். இந்த முன்மாதிரி கருவியை உருவாக்க ரூ 2000 செலவானது என கார்த்தி கூறுகிறார்.

2 நிமிடங்கள்
இதுகுறித்து கார்த்தி கூறுகையில் சளி மாதிரியை எடுக்க 2 நிமிடங்கள் ஆகும். தற்போது தொண்டை, மூக்கு சளி மாதிரிகள் நேரடியாக பணியாளர்களால் எடுக்கப்படுகிறது. அது மிகவும் ஆபத்தானது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும். இந்த ரோபோவை செல்போன் செயலி மூலம் இயக்குவதால் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க தானியங்கி தன்மை கொண்டது. இவற்றை மருத்துவமனைகள் மற்றும் நகரும் வாகனங்களில் கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா! -
Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications