வருகிறது சீனாவின் "உளவு" கப்பல்! இலங்கையை காதில் வாங்காத சீனா.. இந்தியாவின் அழுத்தம் என்னாச்சு
கொழும்பு: சீன ராணுவத்திற்குச் சொந்தமான கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை கேட்டுள்ள நிலையில், இது குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே மோசமான சூழல் நிலவி வருகிறது. அங்கு நிலவும் பொருளாதார சூழல் காரணமாக உணவு, மருந்து பொருட்களின் விலை கூட விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த பொருளாதார அழுத்தம் அங்கு அரசியல் குழப்பத்திற்கும் வழிவகுத்தது. சில மாதங்களில் மட்டும் இரு பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கை
இலங்கையை நிலையைச் சீர்செய்ய இப்போது இருக்கும் அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதுவரை இந்தியா மட்டுமே இலங்கைக்கு இந்த இக்கட்டான சூழலில் உதவி உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை உச்சத்தில் இருந்த போது, இந்தியா தான் டீசல் கொடுத்து உதவியது. அதேபோல தமிழக அரசும் கூட இலங்கை மக்களுக்குத் தனியாக உதவி பொருட்களைக் கப்பல் மூலம் அனுப்பி வைத்தது.

சீனா
இலங்கை நிலை இன்னும் முழுமையாக சீரடையாத நிலையில், இடையில் சீனாவின் நடவடிக்கைகள் வேறு ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலும் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. முதலில் சீனா தைவானைச் சீண்டியது. அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் பயணத்தை எதிர்த்து, தைவான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்தது பெரிய அளவில் போர்ப் பயிற்சிகளைச் செய்தது.

ராணுவ கப்பல்
இதற்கு அமெரிக்கா தொடங்கி பல்வேறு நாடுகளும் கடும் கண்டத்தைத் தெரிவித்து இருந்தது. இந்தச் சூழலில் சீனா ராணுவத்திற்குச் சொந்தமான யுவான் வாங் 5 என்ற கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. இதற்குக் கடந்த ஜூலை 12ஆம் தேதி தான் அப்போதைய இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது. இப்போது புதிய பிரதமர் பொறுப்பேற்றுள்ள நிலையில், சீன கப்பலுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தியா
இந்தியாவும் கூட சீன ராணுவ கப்பலின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால் இந்த கப்பலைச் சீனா ஆய்வு கப்பல் என்று கூறினாலும், இதன் மூலம் ஏவுகணை செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியுமாம். இலங்கையில் இருந்து கொண்டு இந்தியாவைக் கண்காணிப்பதே சீனாவின் திட்டம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு இந்தியாவும் இலங்கையிடம் தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியது.

இலங்கை வேண்டுகோள்
இதனால் வேறுவழியின்றி, அந்த சீன கப்பலின் வருகையைக் காலவரையின்றி தாமதப்படுத்துமாறு இலங்கை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு இலங்கை கடிதமும் எழுதி இருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள் இலங்கையின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து இருந்தனர். இந்தச் சூழலில் சீன கப்பல் குறித்து சில ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கண்டுகொள்ளவில்லை
அதாவது இலங்கையின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, சீன கப்பல் இலங்கையை நோக்கித் தொடர்ந்து பயணித்து வருவதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. 23,000 டன் எடையுள்ள யுவான் வாங் 5 கப்பல் இன்று காலை 10 மணியளவில், இந்தோனேசியாவின் கடற்கரையிலிருந்து மணிக்கு 26 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கிப் பயணிக்கிறது. இது இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அம்பாந்தோட்டையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

சீனா பதில்
சீனா இந்த கப்பலை ராணுவ பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் என்பதாலேயே இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு இந்தியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் சீனா பதில் அளித்துள்ளது. அதாவது, "சீனாவின் அறிவியல் நடவடிக்கைகளை நியாயமாகப் பார்க்கவும். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான ஒத்துழைப்பைத் தொந்தரவு செய்வதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications