கோத்தபாய ராஜபக்சே நாளை இலங்கை திரும்புகிறார்.. ரணிலுக்கு நெருக்கடி- மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்?
கொழும்பு: தாய்லாந்தில் வீட்டு சிறையில் இருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாளை கொழும்பு திரும்புகிறார். இதனால் இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பொருளாதாரப் பேரழிவை சீரமைக்காமல், மக்கள் புரட்சியை எதிர்கொள்ள முடியாமல் அந்நாட்டை விட்டு தப்பி ஓடியவர் கோத்தபாய ராஜபக்சே. முதலில் மாலத்தீவு, பின்னர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருந்தார் கோத்தபாய. தற்போது தாய்லாந்தில் குறுகிய கால அனுமதியுடன் வீட்டுச் சிறையில் உள்ளார் கோத்தபாய ராஜபக்சே.

கோத்தபாயவுக்கு உலகின் எந்த ஒரு நாடும் அடைக்கலம் தர முன்வரவில்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் இலங்கை திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கோத்தபாய. இது தொடர்பாக இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுடன் தொலைபேசியில் கோத்தபாய ராஜபக்சே ஆலோசனை நடத்தினார்.
மேலும் கோத்தபாயவின் வீடு உள்ளிட்ட இடங்களில் 8 அடுக்கு பாதுகாப்புகளுக்கு ரணில் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. கோத்தபாயவுக்கு எதிராக எந்த ஒரு சிறு ஆர்ப்பாட்டமும் நடத்தவிடக் கூடாது என்பதில் ரணில் முனைப்பாக உள்ளார்.
இதனிடையே இலங்கையில் எந்த ஒரு மக்கள் கிளர்ச்சியும் நடைபெறாத வகையில் ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கம், அடக்குமுறைகளை ஏவிவிட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மாளிகை உள்ளிட்ட இடங்களைக் கைப்பற்றியவர்கள், காலி முகத் திடல் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என அனைவரும் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரணில், ஜனாதிபதியான நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரங்களைத் தாண்டிவிட்டது.
இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளார். இலங்கை திரும்பும் அவர், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. தமது ஆதரவு எம்.பி. ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து நியமன எம்.பியாகி பிரதமராவது என கோத்தபாய திட்டமிட்டுள்ளாராம். இதற்கு ரணில் விக்கிரமசிங்கே முழுமையான ஆதரவு தெரிவித்திருக்கிறாராம்.
அதேநேரத்தில் கோத்தபாய இலங்கைக்கு மீண்டும் திரும்பி அரசியலில் ஈடுபட்டால் மக்கள் மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபடவும் வாய்ப்பிருக்கிறது. தற்போதைய ரணில் அரசாங்கம், அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டால் இலங்கையில் ரத்த ஆறுதான் மூடும் எனவும் மூத்த பத்திரிகையாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications