"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திமிர்ப் பேச்சு
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்
கொழும்பு: "இப்பதான் ஒரு சந்தோஷமான செய்தி கிடைச்சிருக்கு.. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல் படை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், அத்துமீறுவதும் பல வருஷமாக தொடர் கதையாக நடந்து வரும் செயலாகும்.. மத்திய, மாநில அரசுகள் தலையீட்டால் மட்டுமே அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.. மற்றபடி இந்த பிரச்சனைக்கு இதுவரை ஒரு தீர்வும் காணப்படவில்லை.

நேற்றுகூட, ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்... அப்போது திடீரென அங்கு வந்த சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி எறிந்தது.. கையில் இருந்த கண்ணாடி பாட்டில்களையும் வீசி கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்கியது.
இதனால் நிலைகுலைந்து போன மீனவர்கள், உடம்பெல்லாம் காயமடைந்தனர்.. பிழைப்புக்காக வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் எல்லாம் சேதம் ஆகிவிட்டன. இப்படித்தான் ஒருவாரத்துக்கு முன்பும் இதேபோல ஒரு அட்டூழியம் நடந்தது.
இந்த சமயத்தில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து இலங்கை கடல்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சையான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்... அவர் சொல்லும்போது, "இந்திய மீனவர்கள் மீது இலங்கை கப்படல் படைதாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. இப்பதான் ஒரு சந்தோஷமான செய்தி கிடைச்சிருக்கு
நான் ஏற்கனவே இந்திய தரப்புக்கு ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு கடற்படை தளபதிக்கு, எல்லாருக்கும் சொன்னேன், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்று.. அப்படி கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இந்திய-இலங்கை மீனவர்களிடையே மோதல் கண்டிப்பாக உருவாகும்... கடல்ல சண்டை தொடங்கும்னு சொன்னேன்" என்று தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், நம் முதல்வருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி மிரட்டல் விடுக்கும் வகையிலும், பொறுப்பற்ற முறையிலும் பேசியுள்ள டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications