சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் ரத்து.. பொதுமக்கள் அவதி
கடலூர்: தமிழ்நாடு முழுவதுமே சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடைகளில் நேற்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் நிறுத்தப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.இன்று முதல் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படுகிறது என்பதால்,இனி பொங்கல் முடிந்து தான் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது,
கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 994 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள 1,458 ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்து வருகிறது கூட்டுறவுத்துறை. கடலூர் மாவட்டத்தில் கைரேகை வைக்காமல் ரேஷனில் எதுவும் வாங்க முடியாது. அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் எந்திரம் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பயோமெட்ரிக் எந்திரத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் ஸ்கேன் செய்யப்படுவதோடு குடும்பத்தலைவரின் விரல்ரேகையும் பதிவு செய்யும்போது அடிக்கடி செயல்படாததால் பொருட்கள் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினை அடிக்கடி நடப்பதால், ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அவதிப்படும்நிலை ஏற்படுகிறது. மேலும், கடை ஊழியர்களும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூரில் நேற்று பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளுக்கு சென்ற போது, வழக்கம் போல் சர்வர் பிரச்சனையால் பயோமெட்ரிக் எந்திரத்தில் ஸ்மார்ட் கார்டுகள் பதிவாகவில்லை. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய முடியாத நிலை எழுந்தது. இந்த பிரச்சனை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு இன்னும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்திருக்கிறார்கள்.இனி பொங்கல் பண்டிகை முடிந்தது கிட்டத்தட்ட 18ம் தேதிக்கு பிறகே அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க முடியும்.
கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இன்று சர்வர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை. ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வர் பிரச்சினை நேற்று இரவுக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் எவ்வித பாதிப்பும் இன்று ஏற்படவில்லை.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications