119 இடம்பெயர் தொழிலாளர்களை பலி கொண்ட கொரோனா லாக்டவுன்
டெல்லி: கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் நாடு முழுவதும் 119 பேர் இடம்பெயர் தொழிலாளர்களின் உயிர்களை பலி கொண்டிருக்கிறது.
கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் இன்று மே 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது. 4-வது கட்ட லாக்டவுன் புதிய முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த லாக்டவுன் காலத்தில் மிகப் பெரிய துயரத்தினை தேசத்தின் அடித்தட்டு மக்கள் சொந்த வாழ்விடங்களில் எதிர்கொண்டிருக்கின்றனர். ஆனால் போகவும் வழியில்லாமல் வாழவும் பாதை தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் தவிக்க விடப்பட்டனர் இடம்பெயர் தொழிலாளர்கள்.
சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் பிழைக்க போன இடத்தில் கிடைத்ததை தின்று வாழ்க்கையை கழித்தவர்கள் ஒரு பக்கம்.. வருமானத்துக்கு வழியில்லை.. இனியும் வாழ்வதும் முடியாது என்பதற்காக சொந்த ஊரை நோக்கி நடந்தும் சைக்கிளிலும் கிடைத்த வாகனங்களிலும் பயணித்தவர்கள் பலர்.
இப்படி நடைபயணமாக வந்தவர்கள், சைக்கிளில் வந்தவர்கள் நடுவழியில் விபத்துகளில் சிக்கி மாண்டு போகிற செய்திகள் இப்போதுதான் வெளி உலகத்துக்கு தெரியவருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக கொத்து கொத்தாக நிகழ்ந்த மரணங்கள்தான் ஊடக வெளிச்சங்களில் பட்டிருக்கின்றன.
பசியாலும் பட்டினியாலும் நடுவழியில் மாண்டு போன மனித உயிர்கள் எத்தனையோ! இந்த தேசத்தின் குடிமகன், குடிக்க தண்ணீரும் இல்லாமல் சுருண்டு விழந்து செத்து போன சம்பவங்கள் எத்தனையோ.. ஏதோ ஒருவகையில் இதுவரையில் 119 இடம்பெயர் தொழிலாளர்கள் பலியாகி இருப்பதாக பதிவாவது இருக்கிறது என்பதுதான் ஆறுதல்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications