EVM-யில் வேட்பாளரின் போட்டோ இடம்பெறும்.. சட்டசபை தேர்தலில் புதிதாக அமல் - அறிவித்த தேர்தல் ஆணையம்
டெல்லி: தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரிக்காக சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலை வெளிப்படையாக நடத்தும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இவிஎம் எனும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம்பெறுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதியை அறிவித்தார்.

இந்த வேளையில் தேர்தலை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் சில முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்தார். அந்த வகையில் இவிஎம் எனும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
"வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் EVM-யில் இடம்பெறும். அவரது முகம் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக புகைப்பட இடத்தின் நான்கில் மூன்று பங்கு முகத்தால் ஆக்கிரமிக்கப்படும். வாக்குச்சீட்டில் அச்சிடப்படும் புகைப்படம் 2 செமீ அகலமும் 2.5 செமீ உயரமும் கொண்டதாக இருக்கும். இது பீகார் சட்டசபை தேர்தலில் அமலானது. இப்போது மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது.
வேட்பாளர்களின் வரிசை எண்கள் மற்றும் நோட்டா (NOTA) உள்ளிட்டவை தெளிவாகத் தெரியும் வகையில் தடித்த எழுத்துருவில் (Size 30) அச்சிடப்பட வேண்டும் என இந்த வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன. தேர்தல் நடத்தை விதிகள், 1961இன் விதி 49பி இன் கீழ் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன'' என்றார்.
இதற்கு முன்பு தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வரிசை எண், வேட்பாளரின் பெயர், கட்சியின் சின்னம் மட்டுமே இடம்பெறும். வேட்பாளரின் போட்டோ இடம்பெற்றது இல்லை. இப்போது முதல் முறையாக இடம்பெற உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications