கொரோனா பாதித்த சோனியா காந்திக்கு என்னாச்சு? உடல்நிலை குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதலில் வீட்டில் தனிமையில் இருந்தார்.
அதன்பிறகு அவர் டெல்லியில் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோனியா காந்திக்கு என்னாச்சு?
இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்த விபரங்களை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான ஜெய்ராம்ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சமீபத்திய கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் 12ம் தேதி மதியம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுவாசக்குழாயில் பூஞ்சை
மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சுவாசக்குழாயில் அவருக்கு பூஞ்சை தாக்குதல் உள்ளது. இதற்கான சிகிச்சைகள் தொடர்கிறது. மேலும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்கும் தொடர் கண்காணிப்புடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு
நேஷனல் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்க பிரிவினர் சம்மன் வழங்கி இருந்தனர். இந்நிலையில் தான் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு விசாரணையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 13ம் தேதி முதல் ராகுல்காந்தி தொடர்ந்து 3 நாட்கள் அமலாக்கபிரிவு விசாரணைக்கு ஆஜரானார்.

ராகுலுக்கு 3 நாள் அனுமதி
நேற்று அவருக்கு ரெஸ்ட் வழங்கப்பட்ட நிலையில், இன்று ஆஜராக அமலாக்க பிரிவினர் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் சோனியா காந்தியின் உடல் நலனை காரணம் காட்டி அவர் அமலாக்கத்துறை பிரிவு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். அதில் சோனியா காந்தியின் உடல்நலனை குறிப்பிட்டு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்கள் விலக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதனால் மறுவிசாரணைக்கு ராகுல்காந்தி ஜூன் 20ல் ஆஜராக உள்ளார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தியின் உடல்நலம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications