80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு
80 கோடி பேர் பயனடையும் வகையில் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள்.
டெல்லி: 80 கோடி பேர் பயனடையும் வகையில் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரியும் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சம் பேராக அதிகரித்தள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன், வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் இதற்காக 26000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மோடி.

இந்த நிலையில் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ உணவு தானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அப்போது கொரோனா பரவல் குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் 80 கோடி பேர் பயனடையும் வகையில் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் இதற்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமார் 80 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications