சென்னை ஐஐடி-யில் ஜாதி பாகுபாடு..விசாரணை குழு அமைக்க வேண்டும்: லோக்சபாவில் திமுக எம்பி செந்தில்குமார்
டெல்லி: சென்னை ஐஐடி கல்வி நிலையத்தில் ஜாதி பாகுபாட்டால் எஸ்.சி எஸ்.டி மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவதாக திமுக எம்.பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
சென்னை ஐஐடி-யில் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுவதாகவும், அதனால் தான் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், பேராசிரியர் விபின் பி வீட்டில் தெரிவித்திருந்தார்.
ஜாதி பாகுபாடு குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும், இல்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் பேராசிரியர் விபின்.

எம்.பி செந்தில்குமார்
இந்நிலையில், பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில், திமுக எம்.பி செந்தில்குமார் ஐஐடி பிரச்சனை குறித்துப் பேசியிருக்கிறார். நேற்று பாராளுமன்றத்தில் அவர் பேசுகையில், ''ஐஐடி மெட்ராஸில் பணி நியமனத்தின் போது எஸ்.சி எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரிடம் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பேராசிரியர் விபின், ஐஐடியில் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக சொல்லி ராஜினாமா செய்திருக்கிறார்.

ஜாதிய பாகுபாடு
இதேபோல பல ஆசிரியர்களும், மாணவர்களும் ஜாதியின் பெயரால் பாகுபாட்டுக்கு ஆளாவதாக புகார் எழுந்துள்ளது. அதே நேரம் மெட்ராஸ் ஐஐடி கொடுத்துள்ள விளம்பரத்தில் தலித் படிப்புகள் குறித்த விபரங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. எனவே ஆசிரியர் விபின் கூறியிருக்கும் புகாருக்கு விசாரணை குழு அமைத்திட வேண்டும். அதேபோல் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினர் பணியமர்த்தலில் முறைகேடு நடக்காமல் இருக்க ஆவண செய்யும்படி ஒன்றிய கல்வி அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று பேசினார்.

மெட்ராஸ் ஐஐடி
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது ஜாதி ரீதியிலான தாக்குதல் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. குறிப்பாக மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாகத் தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விட்டுச் செல்வதும் அதிகரித்தது.
நீதிமன்றமும் மெட்ராஸ் ஐஐடி நிர்வாகத்தை இதற்காக எச்சரித்தது. இந்தியாவில் உள்ள பல ஐஐடி-களின் முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த ஜாதி, மதப் பாகுபாடுகள், பாரபட்சங்கள் குறித்து பொதுவெளியில் பேசத் தொடங்கினார்கள். இந்த நிலையில்தான் ஐஐடி மெட்ராஸில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திஃப் தற்கொலை செய்துகொண்டார்.

பேராசிரியர்
மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாக சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது ஜாதி ரீதியிலான தாக்குதல் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து, அங்கு தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விட்டுச் செல்வதும் அதிகரித்தது. இட ஒதுக்கீட்டின்படி ஐஐடி கல்வி நிலையங்களில் ஏராளமானோர் பணிக்கு தேர்வாகிவருகின்றனர். அவர்களில் 10-ல் 7 பேர் நிர்வாகத்தில் நிலவும் சாதிய ஆதிக்கத்தின் காரணமாகப் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு, மனதளவில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாக சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது ஜாதி ரீதியிலான தாக்குதல் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து, அங்கு தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்கள் பாதியிலேயே படிப்படி விட்டுச் செல்வதும் அதிகரித்தது. இட ஒதுக்கீட்டின்படி ஐஐடி கல்வி நிலையங்களில் ஏராளமானோர் பணிக்கு தேர்வாகிவருகின்றனர். அவர்களில் 10-ல் 7 பேர் நிர்வாகத்தில் நிலவும் சாதிய ஆதிக்கத்தின் காரணமாகப் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு, மனதளவில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பேராசிரியர் விபின்
ஐஐடி மெட்ராஸில் 2019-ம் ஆண்டு முதல் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்துவந்தவர் விபின் பி வீட்டில். ''நான் பணிக்குச் சேர்ந்ததிலிருந்து என்னுடைய துறையில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளை அதிகமாக அனுபவித்துவருகிறேன். ஐஐடி-யில் ஜாதிப் பாகுபாடு தொடர்பான தனிநபர்களின் வழக்குகளை கவனித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். மேலும் அந்தக் குழுவில், எஸ்சி / எஸ்டி கமிஷன், ஓபிசி கமிஷன் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் இடம்பெற்றிருக்க இருக்க வேண்டும்" என்று கூறி ராஜினாமா செய்தார். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பிரதமருக்கு கடிதம் எழுதினார் விபின். சென்னை ஐஐடியில் விசாரணை நடத்த வேண்டும், இல்லையென்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கடிதம் எழுதியுள்ளார்.
-
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications