எல்லையில் சீனா அத்துமீறியதால் இருதரப்பிலும் உயிரிழப்புகள்- மத்திய வெளியுறவு அமைச்சகம்
டெல்லி: லடாக் எல்லையில் தற்போதைய நிலையை மாற்ற சீனா ஒருதலைபட்சமாக மாற்ற முயற்சித்ததால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கிழக்கு லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். சீனா தரப்பில் 5 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை ராணுவமும் சீனா ஊடகங்களும் உறுதி செய்தன.

இந்த நிலையில் எல்லை நிலவரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
லடாக் கிழக்கு எல்லைப் பகுதியில் இந்தியா- சீனா இடையேயான பதற்றத்தைத் தணிக்க ராணுவ மற்றும் ராஜதந்திர வழிகளில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஜூன் 6-ந் தேதியன்று மூத்த அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பும் பதற்றத்தை தணிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
ராணுவ தளபதிகள் நிலைலையிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. கால்வன் பள்ளத்தாக்கில் இருந்து சீனா படைகள் வெளியேறிய நிலையில் ஜூன் 15-ந் தேதி இரவு இருதரப்பில் மோதல் நிகழ்ந்துள்ளது. தற்போதைய எல்லை நிலைமையை சீனா ஒருதலைபட்சமாக மாற்ற முயற்சித்த காரணத்தால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சீனா ஒப்பந்த்ததை மதித்திருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அனைத்து நடவடிக்கைகளையுமே எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்குள்தான் மேற்கொண்டு வருகிறது. இதேபோல்தான் சீனாவும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றுதான் இந்தியா விரும்புகிறது. அதேநேரத்தில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications