சீன எல்லையில் திடீரென அதிகரிக்கும் 'டிரோன்' நடமாட்டம்.. பதிலடி கொடுக்கும் இந்தியா.. மீண்டும் பதற்றம்
டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள எல்லையில் சீனா தனது டிரோன் மற்றும் ராணுவ நடமாட்டத்தை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் மோதல் போக்கே நிலவி வருகிறது. அதிலும் கல்வான் மோதலுக்கு பின் நிலைமை மோசமானது.
அதைத் தொடர்ந்து இரு தரப்பும் எல்லையில் வீரர்களை குவிக்க தொடங்கின. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது..

சீன ராணுவம்
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் பரஹோட்டி பகுதியில் அமைந்துள்ள எல்லையில் சீன ராணுவம் தனது நடவடிக்கைகளை அதிகரித்தது. கடந்த சில நாட்களாகவே பரஹோட்டி பகுதியில் சுமார் 35 வீரர்கள் சுற்றியிருந்த பகுதிகளை ஆய்வு செய்து, சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. சீன ராணுவம் இந்த நடவடிக்கை மூலம் நிச்சயம் விதிகளை மீறியுள்ளதாகவே அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ-க்கு தெரிவித்தார்.

தலைமை தளபதி
அதேநேரம் சீன படைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தரப்பில் இருந்தும் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவ தெரிவித்துள்ளது. இப்பகுதியில் சீன ராணுவம் தனது செயல்பாடுகளை தொடங்கியிருந்தாலும் கூட, பல ஆண்டுகளாக இந்தியா இங்கு தான் செயல்பட்டு வருகிறது என்றும் இந்திய ராணுவம் எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்திய காலங்களில்தான் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மத்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஒய் டிம்ரி ஆகியோர் நிலைமையை கண்காணிக்க எல்லை பகுதிகளில் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடதக்கது.

டிரோன்
பரஹோட்டி பகுதியில் சீன விமானப் படையின் நடவடிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ட்ரோன்கள் நடமாட்டம் அப்பகுதியில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய ராணுவம் கூடுதல் வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. அதேபோல இந்திய எல்லையில் இருக்கும் சினியலிசாண்ட் ஃபார்வர்ட் லேண்டிங் தளத்திலும் இந்திய ராணுவம் தனது செயல்பாடுகளை அதிகரித்துள்ளது.

பேச்சுவார்த்தை
முன்னதாக கடந்த வாரம் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் சமயத்தில் இந்திய சீன வெளியுறவு துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தில் எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பது இரு நாட்டின் உறவுக்கும் வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்று என்பதால் மூத்த ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இருப்பினும், தற்போது உத்தரகண்ட் எல்லையில் இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்












Click it and Unblock the Notifications