ஓ இதுதான் காரணமா! டெல்டா முதல் ஓமிக்ரான் வரை.. உருமாறிய கொரோனா வகைகளுக்கு வித்தியாசமான அறிகுறிகள்!
டெல்லி: ஆல்பா தொடங்கி இப்போது ஓமிக்ரான் வரை கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா வைரசின் அறிகுறிகள் பெரியளவில் மாறியுள்ளன. அதற்கான காரணங்களை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
Recommended Video
ஓமிக்ரான் கொரோனா தான் இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் பரவிய கொரோனா வகைகளுடன் ஒப்பிடுகையில் பல வகைகளில் ஓமிக்ரான் வேறுபட்டது.
குறிப்பாக அறிகுறிகள், குணமடையும் வேகம், நோய் தீவிரம் மற்றும் பரவும் வேகம் ஆகியவற்றில் முந்தைய கொரோனா வகைகளில் இருந்து மாறுபட்டே உள்ளது.

அறிகுறிகள்
கொரோனா பரவல் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் அறிகுறிகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு முன்பு வரை காய்ச்சல், இருமல் மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு ஆகியவை கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக இருந்து வந்தது. ஆனால், ஓமிக்ரான் கொரோனாவில் இந்த அறிகுறிகள் முக்கியமானதாக இருப்பதில்லை. அதற்குப் பதிலாக, தொண்டைப் புண், தும்மல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் முக்கியமாக உள்ளன.

டெல்டா
அதேபோல கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு ஓமிக்ரான் ஏற்படும்போது சளி தான் முக்கிய அறிகுறியாக உள்ளதாக Zoe நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேபோல டெல்டா கொரோனா சமயத்தில் மூச்சுத் திணறல் முக்கிய பிரச்சனையாக இருந்தது. ஆனால், ஓமிக்ரான் கொரோனாவில் மூச்சுத் திணறல் என்பது கிட்டதட்ட யாருக்குமே ஏற்படவில்லை. இது ஒரு நல்ல விஷயமாகும்.

டெல்டா vs ஓமிக்ரான்
டெல்டா கொரோனாவை காட்டிலும் ஓமிக்ரான் வேகமாகப் பரவினாலும் கூட அது லேசான பாதிப்பையே பெரும்பாலும் ஏற்படுத்துகிறது. அதேநேரம் டெல்டா, ஓமிக்ரான் அறிகுறிகளில் சில ஒற்றுமைகள் இருக்கவே செய்கிறது. குறிப்பாக மூக்கடைப்பு, தலைவலி, சோர்வு, தொண்டைப் புண் ஆகியவை இரண்டு கொரோனா வகைகளிலும் பொதுவான அறிகுறிகளாக உள்ளன. டெல்டா கொரோனாவில் தும்மல், வாசனை மற்றும் சுவை இழப்பு அதிகம் இருந்தது. ஆனால், ஓமிக்ரானில் இது இல்லை.

முக்கிய அறிகுறிகள் என்ன
ஓமிக்ரான் கொரோனாவில் மூக்கு ஒழுகுதல் தான் முக்கியமான அறிகுறியாக உள்ளது. ஓமிக்ரான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 73% பேருக்கு மூக்கு ஒழுகுதல் முக்கிய அறிகுறியாக உள்ளது. அதைத் தொடர்ந்து 68 சதவீதம் பேருக்குத் தலைவலி, 64 சதவீதம் பேருக்குச் சோர்வு மற்றும் 60 சதவீதம் பேருக்கு தும்மல் பிரச்சனைகள் உள்ளன. மேலும், கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் இடையே கூட அறிகுறிகளில் வேறுபாடுகள் உள்ளன.

மாற்றம் ஏன்
கடந்த இரண்டு ஆண்டுகளில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை உருமாறியுள்ளன. எனவே இது போன்ற உருமாறிய கொரோனா வகைகளுக்கு வெவ்வேறு பண்புகள் உள்ளன. அவை ஏற்படுத்தும் அறிகுறிகளும் வேறு வேறாக உள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட எந்த இரண்டு வகைகளும் ஒரே தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

இது தான் காரணம்
ஒவ்வொரு உருமாறிய கொரோனா வகைகளுக்கும் ஒவ்வொரு வகையான அறிகுறி உள்ளதற்கு இது தான் காரணம். இதைத் தாண்டி கொரோனா வேக்சின்கள் வைரஸ் பரவலின் தீவிர தன்மை மற்றும் நீண்டகால அறிகுறிகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனா வேக்சின் போட்டவர்களிடையே தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications