சீனாவுக்கு பதிலடி தருவதில் தீவிரம்- மலாக்கா ஜலசந்தியில் போர்க் கப்பல்கள்- தயார் நிலையில் விமானப் படை
டெல்லி: லடாக் எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்களின் உயிரை பறித்த சீனாவின் செம்படைக்கு பதிலடி தருவதில் இந்தியா படுதீவிரமாக நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. மலாக்கா ஜலசந்தி பகுதிக்கு போர்க்கப்பல்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
லடாக் பிராந்தியத்தின் கல்வான் (கால்வன்) பள்ளத்தாக்கு தங்களுக்கே உரியது என உரிமை கோருகிறது. இதுவரை இல்லாமல் இப்போதுதான் சீனா இப்படி உரிமை கோரி அடம்பிடிக்கிறது.

லடாக் கிழக்கு
இதனால்தான் எல்லையில் போர்ச் சூழல் உருவானது. இது தொடர்பாக சீனாவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதையும் மீறி கல்வான் பள்ளத்தாக்கில் முகாம் அமைத்தது சீனா. இந்த முகாமை அகற்றுவதற்காக இந்திய ராணுவ வீரர்கள் அதிகாரி சந்தோஷ்பாபு தலைமையில் களமிறங்கினர்.

இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்பிலும் மோதல் வெடித்தது. இம்மோதல்களில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பிரதமர் எச்சரிக்கை
இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவின் அத்துமீறிய தாக்குதலுக்கு எதிராக போராட்டங்கள், சீனா தேசிய கொடி எரிப்பு என தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, லடாக்கின் கிழக்கில் வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது- உரிய பதிலடி தருவோம் என எச்சரித்திருக்கிறார்.

முப்படைகளும் தயார் நிலையில்
இந்த நிலையில் நாட்டின் முப்படைகளும் ஒரு யுத்த சூழலுக்கு தயாராகி வருகிறது. போர்க்கப்பல்கள் மலாக்கா ஜலசந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் போர்க் கப்பல்களை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் விமானப் படையும் முழு வீச்சில் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. சீனாவின் அடாவடித்தனத்துக்கு ராணுவம் தக்க பதிலடி தரும் வகையில் முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications