கொரோனாவில் இருந்து மீளும் இந்தியா : 6,990 பேருக்கு பாதிப்பு - 10,116 பேர் மீண்டனர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 190 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 200க்கும் கீழே குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 190 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை தனது பிடியில் வைத்துள்ளது. மே மாதத்தில் தோன்றிய இரண்டாவது அலை இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். பல்லாயிக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
கொத்துக்கொத்தாக மரணமடையவே சுடுகாடுகளிலும் இடுகாடுகளிலும் இறுதிச்சடங்கு செய்யக்கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது. கொரோனாவை தடுக்க ஒரே ஆயுதமாக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு வகையான தடுப்பூசியை நாடு முழுவதும் செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது. நூறு கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

6,990 பேர் பாதிப்பு
கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,45,87,822 பேராக உயர்ந்துள்ளது.

10,116 பேர் மீண்டனர்
கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 10,116 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,40,18,299 பேராக அதிகரித்துள்ளது. நோயிலிருந்து குணமடைந்தோர் சதவிகிதம் 98.35% பேராக உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

190 பேர் மரணம்
கடந்த 24 மணிநேரத்தில் 190 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மொத்தம் 4,68,980 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1,00,543 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது கடந்த 551 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவாகும்.

பாசிட்டிவிட்டி சதவிகிதம்
வாராந்திர பாசிட்டிவிட்டி விகிதம் 0.84% ஆக உள்ளது. இது கடந்த 16 நாட்களாக 1%க்கும் கீழ் உள்ளது. தினசரி பாசிட்டிவிட்டி விகிதம் 0.69% ஆக உள்ளது. இது கடந்த 57 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,23,25,02,767 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications