ஐ.ஐ.டி. நிறுவனங்களில் 12% இடஒதுக்கீடு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் முதன்மையான ஐ.ஐ.டி.களில் 40% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணி நியமனங்கள் குறித்து லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அளித்த பதிலின் முக்கிய அம்சங்கள்:
23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் மொத்தம் 6,511 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் 4,370 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இடஒதுக்கீடு என்ன?
மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%; உயர் ஜாதி ஏழைகளுக்கு 10%; தலித்துகளுக்கு 16.6%; பழங்குடியினருக்கு 7% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

12% இடஒதுக்கீடு
இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 59.5% பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஐ.ஐ.டிகளில் 12% இடஒதுக்கீடு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை நிலவரம்
உதாரணமாக மும்பை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் 3.8% பணியிடங்கள்தான் இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பட்டிருக்கிறது. ஆனால் ஆதிக்க ஜாதியினருக்கு 96% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதேபோல் 6.5%தான் இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை ஐஐடி
சென்னை ஐ.ஐ.டி.யில் 88% இடங்கள் ஆதிக்க ஜாதியினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் காலி இடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ரமேஷ் பொக்ரியால் கூறினார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications