பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம்
டெல்லி: சர்வதேச அளவில் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம் எழுந்தது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது.
அதன்படி, ரூ.13 ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ரூ.10 ஆக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது.

வரி குறைப்பு
ஏற்கெனவே இந்தியாவில் நயாரா பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வரி குறைப்பு, எரிபொருளின் விலையை குறைக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், இந்த வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறையாது. ஆனால், விலை உயராமல் இருக்கும் என்று கூறியிருக்கின்றனர்.
இந்த கூற்றை உறுதி செய்யும் வகையில், எரிபொருளின் சில்லறை விற்பனை விலைகளைக் குறைப்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், இந்தக் குறைப்பினால் மத்திய அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு எவ்வளவு என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
வரி குறைப்பு ஏன்?
ஈரான் போர் காரணமாக இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. சவுதி, கத்தார், பஹ்ரைன், அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இந்த எண்ணெய் கப்பல்கள், ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் பயணித்து வர வேண்டும். இந்த நீரிணையை கடந்த 4 வாரங்களாக ஈரான் முடக்கியிருக்கிறது. எனவே, இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டிருக்கிறது.
இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வேறு நாடுகளிலிருந்து எண்ணெய்யை வாங்க தொடங்கியிருக்கின்றன. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. நயாரா நிறுவனம் பெட்ரோலுக்கு ரூ.5 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 என உயர்த்தியிருந்தது. இது நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த அச்சத்தை குறைக்கவும், பெட்ரோல் டீசல் விலை உயராமல் தடுக்கவும் தற்போது வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications