மொத்த பணமும் ரிடர்ன்.. இலவச விமான டிக்கெட்! இந்திய பயணிகளுக்கு “குட் நியூஸ்”! வரும் சூப்பர் சட்டம்
டெல்லி: விமான பயணம் மேற்கொள்ளும் மக்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், விமான போக்குவரத்தை அதிகரிக்கும் விதமாகவும் விமான பணிகளுக்கான பல்வேறு விதிகளில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்து உள்ளது டிஜிசிஏ எனப்படும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம். கடைசி நேரத்தில் விமான வகுப்புகள் பயணிகளின் விருப்பம் இன்றி குறைப்பது, விமான சேவை ரத்து, தாமதமான விமான சேவைகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவது போன்றவற்றை தவிர்க்க இதுபோன்ற விதிகளை கொண்டு வருவதாக அறிவித்து உள்ளது டிஜிசிஏ.
பெருமளவில் சிவில் விமான போக்குவரத்தையும், ஏராளமான விமான நிலையங்களையும் கொண்டு இருக்கும் இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்தை முறைபடுத்தி வருகிறது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்.
இந்நிலையில் தற்போது இந்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விமான டிக்கெட் புக்கிங் விதிகளில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல்வேறு புதிய மாற்றங்களை அமல்படுத்த இருக்கிறது.

வகுப்பு மாற்றம்
போக்குவரத்து விமானங்களில் பயணிகள் புக்கிங் செய்திருக்கும் உயர் வகுப்புகளில் இருந்து கடைசி நேரத்தில் குறைவான கிளாஸ்களுக்கு மாற்றம் செய்யப்பட்டால் இதற்கு முன் எந்த கட்டண சலுகையும் அவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. பல விமான பயணிகளுக்கு இது ஒரு மோசமான அனுபவமாகவே இருந்து இருக்கும்.

பணத்தை திரும்ப பெறலாம்
இந்த நிலையில் இனி இதுபோல் வகுப்புகள் வாடிக்கையாளர் விருப்பம் இன்றி குறைக்கப்பட்டால், மொத்த டிக்கெட் பணத்தையும் வரியோடு பயணிகள் திரும்பி பெற்றுக்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முடிவு செய்து இருக்கிறது. அதேபோல் சம்பந்தப்பட்ட பயணிகளை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், இலவசமாக அடுத்த விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும் என சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

பயணிகள் நலன் கருதி
விமான பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும், வகுப்புகளை குறைப்பதன் காரணமாகவும் பயணிகளுக்கு ஏற்படும் தாக்கத்தை உணரும் வகையில் இந்த விதிகள் அமைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து டிஜிசிஏ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.

மக்களும் மாற்றுகிறார்கள்
இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், "அதேபோல் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் பயணிகளே சில சமயங்களில் விமான வகுப்புகளை குறைத்துக்கொள்வதை அரசாங்கம் கவனித்து உள்ளது." என்றார். விமான பயணிகள் தொடக்கத்தில் பிசினஸ், ப்ரீமியம் எகனாமி வகுப்புகளில் விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்து கொள்கிறார்கள்.

மாற்றுவது ஏன்?
ஆனால், செக் இன் செய்யும்போது அவர்கள் தங்களின் வகுப்புகளை குறைத்துக்கொள்வதும் வழக்கமாக உள்ளது. விமானங்களின் மாற்றம், அதிகளவிலான முன்பதிவு, நிரம்பாத காலி இருக்கைகள் போன்றவை இதற்கு காரணமாக உள்ளது. இதுபோன்ற சிக்கல்களை களைவதற்காகவும், விமான சேவை ரத்து, போர்டிங் செய்ய அனுமதி மறுப்பு, தாமதமான விமான சேவைகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு உதவ டிஜிசிஏ விதிகளில் மாற்றம் செய்கிறது.

பயணிகளுக்கு குட் நியூஸ்
டிஜிசிஏ கொண்டு வந்த இந்த விதிகள் அமலுக்கு வந்த பிறகு, பயணிகளின் ஒப்புதல் இன்றி அவர்களின் வகுப்புகள் குறைக்கப்பட்டால், அவர்கள் எடுத்த விமான டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அடுத்த விமானத்தில் அவர்களை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அழைத்து செல்ல வேண்டும். பங்குதாரர்களின் கருத்துகளை கேட்பதற்கு திருத்தப்பட்ட மசோதாவை முன்கூட்டியே தெரிவிப்பதாகவும், அதில் தேவையான திருத்தங்களை மேற்கொண்ட பிறகு இறுதியான சட்டம் தயாரிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளார்கள்.
-
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்!












Click it and Unblock the Notifications