நாளை பாரத் பந்த்.. நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்.. எதற்காக இந்த போராட்டம் தெரியுமா?
டெல்லி: ஓபிசி சமூகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய ஸ்டிரைக் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த போராட்டத்திற்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக ஊழியர்கள் சம்மேளனம் நடத்துகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை அந்தந்த சமூகங்கள் வாரியாக எடுத்தால் மட்டுமே அவர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு சரியாக கிடைக்கும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது.

இதனிடையே குறிப்பிட்ட சாதிகளை தாழ்த்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நீண்ட காலமாக நடத்தாமல் புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஓபிசி கணக்கெடுப்பை நடத்தக் கோரி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக ஊழியர்கள் சம்மேளம் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கோரிக்கை மட்டுமல்லாமல் இன்னும் பிற கோரிக்கைகளும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
கோரிக்கைகள் பின்வருமாறு:
- தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை நிறுத்துவது
- சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு
- தனியார் துறைகளில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு
- விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதி சட்டம்
- என்ஆர்சி, குடியுரிமை சட்டம், என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது
- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தொடங்குவது
- ஒடிஸா மற்றும் மத்திய பிரதேச பஞ்சாயத்து தேர்தல்களில் ஓபிசிகளுக்கான தனி வாக்காளர் தொகுதிகள்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பழங்குடியின மக்களை வேறு இடத்திற்கு அனுப்பக் கூடாது
- தடுப்பூசியை கட்டாயமாக்கக் கூடாது
- கொரோனா லாக்டவுன் நேரத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக ரகசியமாக உருவாக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பாரத் பந்த் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த பாரத் பந்த் போராட்டத்தில் என்னவெல்லாம் இயங்கும், இயங்காது என்பது குறித்து அறிவிப்புகள் ஏதும் இதுவரை வரவில்லை.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications