என்ன இப்படி ஆகிப்போச்சு.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு கொலையை ஒப்புக் கொண்ட 'டான்'
பஞ்சாப்பில் கொல்லப்பட்ட விபின் சர்மா என்ற நபரை தான்தான் கொன்றேன் என சாரஜ் சாந்து என்ற நபர் பேஸ்புக்கில் பகிரக்கமாக தெரிவித்து இருக்கிறார்.
அமிர்ததரஸ்: விபின் சர்மா என்ற நபர் சில நாட்களுக்கு முன் நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை வழக்கில் போலீசார் சாரஜ் சாந்து என்ற ரவுடியை தேடி வந்தது.
12 நாட்களாக அவர் எங்கு இருக்கிறார் என போலீசார் தீவிரமாக தேடியும் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. மேலும் அவருடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்ட அவரது நண்பரையும் போலீசார் தேடி வந்தனர்.
போலீசால் தீவிரமாக தேடப்பட்டு வரும் சாரஜ் சாந்து தற்போது தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டு இருக்கிறார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விரிவாக எழுதி இருக்கிறார்.

விபின் சர்மா கொடூரமாக கொலை
கடந்த அக்டோபர் 30ம் தேதி அமிர்ததரசின் முக்கியமான கடை வீதியில் வைத்து விபின் சர்மா என்ற நபர் கொல்லப்பட்டார். இரண்டு நபர் ஒன்றாக சேர்ந்து விபின் சர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பைக்கில் தப்பி சென்றனர். அவரது உடலில் மொத்தம் 8 குண்டுகள் பாய்ந்து இருந்தது. இந்த நிலையில் கொல்லப்பட்ட விபின் சர்மா 'சங்கர்ஷ் சேனா' என்ற இந்துத்துவா கட்சியில் இருந்ததால் ஏதாவது தீவிரவாதியால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

தப்பி ஓடிய சாரஜ் சாந்து
இந்த கொலையை தீவிரமாக விசாரித்த போலீஸ் அங்கு இருந்த சிசிடிவி கேமரா ஒன்றின் பதிவுகளை சோதனை செய்தது. அதன்படி அந்த கொலையை செய்தது உள்ளூர் ரவுடி சாரஜ் சாந்து என்று கண்டுபிடித்தது. அவரின் நண்பரின் முகம் அடையாள காணப்பட முடியவில்லை. இதையடுத்து கடந்த 12 நாட்களாக போலீசார் சாரஜ் சாந்து மற்றும் அவரது நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலை ஒப்புக் கொண்டார்
போலீசார் சாரஜ் சாந்துவை தேடி வரும் அதே சமயத்தில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தைரியமாக போஸ்ட் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த போஸ்ட் மூலம் தான்தான் விபின் சர்மாவை கொலை செய்தது என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறார். மேலும் என்னுடைய செயலுக்கு யாரும் மத சாயம் பூச வேண்டாம் எனவும் அவர் சாரஜ் சாந்து தனது போஸ்ட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பழிக்கு பழி வாங்கினேன்
இந்த போஸ்டில் தன்னுடன் இருந்த நண்பன் யார் என்பதை சாரஜ் சாந்து வெளியிடுவதை தவிர்த்துவிட்டார். ஆனால் அந்த நண்பனின் அப்பாவை சில நாட்களுக்கு முன் விபின் சர்மா கொலை செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த கொலைக்கு பழிவாங்கவே இப்போது விபின் சர்மா கொல்லப்பட்டுள்ளதாக எழுதி இருக்கிறார். இவர் இவ்வளவு தைரியமாக போஸ்ட் எழுதியும் போலீசார் இவரது இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications