ஷிண்டே அலுவலகம் முன் தர்ணா... கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்-10 நாள் ரோட்டிலேயே போராட போவதாக அறிவிப்பு
டெல்லி: கடமை தவறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அலுவலகம் முன்பு தர்ணா நடத்துவதற்காக கிளம்பிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரின் வாகனங்களை டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து 10 நாட்களுக்கு இங்கேயே இருந்து போராடப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளால் டெல்லியே குலுங்கிப் போயுள்ளது. முக்கிய அமைச்சரகங்கள் உள்ள பகுதியை ஆம் ஆத்மியினர் முடக்கி வைத்திருப்பதால் மத்திய அரசின் செயல்பாட்டையே கிட்டத்தட்ட அவர்கள் முடக்கத் திட்டமிட்டிருப்பது போல தெரிகிறது.

தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி நடத்திய அதிரடி ரெய்டு தொடர்பாக, அவருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதைப்போல சகர்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறையினருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த சம்பவங்களால் அதிருப்தி அடைந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதில் தொடர்புடைய 4 காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறு காவல்துறை தலைவரை கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு காவல்துறை ஆணையர் பி.எஸ்.பஸ்சி மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை பின்னர் சந்தித்து பேசிய முதல்வர் கெஜ்ரிவால், ‘கடமையை செய்யாத காவல்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகம் முன் 20ஆம் தேதி (இன்று) முதல்வர் தலைமையில் ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவர் என அக்கட்சி சார்பில் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உள்துறை அமைச்சரின் அலுவலகம் அமைந்துள்ள டெல்லி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி டெல்லி மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடந்தால் அப்பகுதியில் கூட்டம் கூடாமல், உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் இன்று முற்பகலில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கார்களில் தர்ணா செய்வதற்காகப் புறப்பட்டு வந்தனர். ஆனால் அவர்களை போலீஸார் ரயில் பவன் அருகே தடுத்து நிறுத்தினர்.
காரிலேயே உட்கார்ந்திருந்த கெஜ்ரிவால்
தடுத்து நிறுத்தப்பட்ட கெஜ்ரிவால் காரிலேயே அமர்ந்திருந்தார். காரிலிருந்து அவர் இறங்கவில்லை. இதனால் பதட்டம் தொடர்ந்தது. பிற்பகல் 12 மணி வரை தடுப்புகள் அகற்றப்பட மாட்டாது. கெஜ்ரிவாலை அனுமதிக்க முடியாது. எப்பாடுபட்டாவது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்று காவல்துறை தெரிவித்திருந்தது.
அதேசமயம், கேட்டுகள் திறக்கப்படும் வரை காரை விட்டு இறங்கப் போவதில்லை என்று கெஜ்ரிவாலும் பிடிவாதமாக காரிலேயே அமர்ந்திருந்தார். பின்னர் அவர் கீழே இறங்கி வந்து பேசினார்.
10 நாள் போராட்டம் அறிவிப்பு
இந்த நிலையில் தற்போது 10 நாட்கள் இங்கேயே இருந்து போராடப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தனது போராட்டத்தில் டெல்லி மக்களும் சேர்ந்து கொள்ளும்படியும் கெஜ்ரிவால் கூறியுள்ளதால் டெல்லி அதிர்ந்து நிற்கிறது. மேலும் போலீஸ் சட்டத்தில் சீர்திருத்தம் தேவை என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications