கேரளாவை உலுக்கிய நடிகை பாவனா வழக்கு... இதுவரை நடந்தது என்ன?
திருவனந்தபுரம் : தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் கடத்தப்பட்டு காரில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கலாம்:
பிப்ரவரி 17 : அதானி அருகே நடிகை பாவனாவை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இது குறித்து பாவனா போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் பாவனாவின் கார் ஓட்டுனர் மார்ட்டின் ஆன்டனி கைது செய்யப்பட்டார்.
பிப்ரவரி 19: ஆளப்புழாவில் இருந்து 'வடிவல்' சலீம் மற்றும கன்னூரில் இருந்து பிரதீப் என்ற இருவர் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
பிப்ரவரி 20 : மேலும் ஒரு சந்தேகத்திற்குரிய குற்றவாளி மணிகண்டன் தம்மனம் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகையை கடத்த கூலிப்படை அழைக்கப்பட்ட தகவல் கிடைத்தது.
பிப்ரவரி 21: மலையாள நடிகர் ஒருவரின் வாக்குமூலத்தை இந்த வழக்கில் போலீசார் பதிவு செய்தனர்.
பிப்ரவரி 22 : நடிகர் திலீப் தன்னிடம் போலீஸ் விசாரணை நடத்தவில்லை என்று மறுத்தார்.
பிப்ரவரி 23 : முக்கிய குற்றவாளி பல்சர் சுனி மற்றும் அவனது கூட்டாளி விஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக முடிவு செய்தனர். ஆனால் கோர்ட் வளாகத்தில் இருந்து அவர்களை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டனர். இதனால் இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர்
பிப்ரவரி 24 : குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எனினும் பாவனாவிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வீடியோ உள்ள செல்போன் சிக்கவில்லை. பாவனாவை கடத்தியதற்காக ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டதாகக் கூறிய சுனி, செல்போன் குறித்த தகவல்களைத் தர மறுத்துவிட்டார்.
பிப்ரவரி 25 : நீதிமன்றத்தில் கூட்டு சதி என்ற ரீதியில் விசாரணை நடத்த போலீஸ் அனுமதி கோரியது. நடிகை 4 பேர் குற்றவாளி என்று கூறியுள்ளதால், சுனி மற்றும் விஜேஷிடம் மார்ச் 8ம் தேதி வரை விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
பிப்ரவரி 26: குற்றவாளிகளின் செல்போன், கணிணி உள்பட இதர உடைமைகள் கோவையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
பிப்ரவரி 27: நடிகை குறித்த தவறான வீடியோக்களை பரப்பும் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு முகநூல் மேற்பார்வையாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச் 3: குற்றவாளிகளிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் கேட்டுக் கொண்டதால், 4 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டது.
மார்ச் 19: சுனியுடன் நெருக்கத்தில் இருந்த பெண் ஷைனி கைது செய்யப்பட்டார்.
ஜுன் 24 : நடிகர் திலீப் மற்றும் இயக்குனர் நதிர்ஷா தாங்கள் மிரட்டப்பட்டதாகக் கூறினர். சுனி தனக்கு விடுத்த மிரட்டல் கடிதம் என்று ஒரு கடிதத்தையும், ஆடியோ உரையாடலையும் திலீப் வெளியிட்டார்.
ஜுன் 25: நடிகர் திலீப் தன்னை குறி வைத்தே வழக்கு நகர்த்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
ஜுன் 28 : திலீப் மற்றும் நதிர்ஷா இருவரிடமும் சுமார் 13 மணி நேரம் அலுவா காவல் கிளப்பில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
ஜூலை 10 : நடிகர் திலீப் கைது செய்து போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.