இரட்டை இலை கிடைக்குதோ இல்லையோ.. இதில் ஓபிஎஸ்ஸை வீழ்த்தி ஈபிஎஸ் "அபாரம்"!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஓபிஎஸ் அணியைவிட அதிக அளவில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது ஈபிஎஸ் அணி.
டெல்லி: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணி 6,82,000 ஆவணங்களை தாக்கல் செய்து ஓபிஎஸ் அணியை பின்னுக்கு தள்ளியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணியாகப் பிரிந்தது. இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான அதிமுகவினர் என்று கூறி இரட்டை இலை சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு கோரிக்கை வைத்தபோது, தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மார்ச் 23ம் தேதி முடக்கி வைத்தது. மேலும், இரு அணிகளையும் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கடைசி நாள்
இரட்டை சிலை சின்னத்தை முடக்கிய தலைமை தேர்தல் ஆணையம் ஜூன் 16-ம் தேதிக்குள் பிராமண பத்திரங்களை தாக்கல் செய்ய இரு அணிகளுக்கும் உத்தரவிட்டது. அதன்படி இன்று ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

கூடுதல் ஆவணங்கள்
இறுதி நாளான இன்றும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இன்று எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து 2,83,173 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று ஓபிஎஸ் அணியில் இருந்து 22 ஆயிரம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஓபிஎஸ்ஸை பின்னுக்கு தள்ளிய ஈபிஎஸ்
ஆக மொத்தம் இதுவரை ஒபிஎஸ் அணி சார்பில் 3.80 லட்சம் ஆவணங்களும், எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் 6,82,000 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எடப்பாடி செய்த செலவு எவ்வளவு?
20 ரூபாய் முத்திரைத்தாளின் இந்த பிராமணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு முத்திரைத்தாள்கள் வாங்கப்பட்டு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் செய்த செலவு?
ஓபிஎஸ் அணியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3.8 லட்சம் ஆவணங்களுக்காக76 லட்சம் ரூபாய்க்கு முத்திரைத் தாள்கள் வாங்கப்பட்டு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செலவு இல்லாமல் இவற்றை டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டதற்கான செலவுகள் தனி.

களத்தில் தீபா
ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி போன்றே ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் இரட்டை இலைக்கு உரிமை கோரி 50 ஆயிரம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இறுதி நாளான இன்று அவர் கூடுதல் ஆவணங்களை எதையும் தாக்கல் செய்யவில்லை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications