ஏழை மக்களை கருத்தில் கொண்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட வேண்டும்: மோடி வேண்டுகோள்
ஏழை மக்களை கருத்தில் கொண்டு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்
டெல்லி: அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழை மக்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவியலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் சத்யேந்திரநாத் போஸின் 125வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொல்கத்தாவில் தேசிய அறிவியல் மையத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் மோடி உரையாற்றினார்.

அப்போது இந்திய மொழிகள் அனைத்திலும் அறிவியலை நாம் எடுத்து செல்ல வேண்டும். அதன் மூலம் இளைஞர்கள் அறிவியலை ஆர்வத்துடன் படிப்பார்கள். வருங்காலத்தில் அவர்கள் மூலமே புதுபுது கண்டுபிடிப்புகள் நிகழும் என்று மோடி குறிப்பிட்டு உள்ளார்.
எதிர்கால கண்டுபிடிப்புகள் அனைத்தும் சமூக பொருளாதார பிரச்னைகளை கருத்தில்கொண்டு, அதை நீக்கும் வகையில் புதிதான அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் வடிவமைக்க வேண்டும். அதன் மூலமே ஏழை எளிய மக்களும் அறிவியல் சாதனங்களை எளிய வகையில் பயன்படுத்தும்படி அமையும்.
இதை கருத்தில் கொண்டே மத்திய அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தை தொடங்கி உள்ளது. இதன் மூலம் சூரிய மின்சக்தி, பசுமை ஆற்றல், நீர்பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கு தனித்தனி பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் கொண்டுவரப்படும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்தியா விரைவில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் புதிய உச்சத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மாணவர்களுக்கு அறிவியல் குறித்து உற்சாகம் அளித்து அவர்களுக்கும் இது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அறிவியலை பிராந்திய மொழிகள் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications