டோக்லாமில் திடீரென ராணுவத்தைக் குவிக்கும் சீனா.... மீண்டும் போர் பதற்றம்!
இந்தியா - சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் சீனா மீண்டும் ராணுவத்தை குவிக்க ஆரம்பித்துள்ளது.
டெல்லி : இந்தியா - சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் சீனா மீண்டும் ராணுவத்தை குவிக்க ஆரம்பித்துள்ளது. டோக்லாம் எல்லைப் பகுதியை சுத்தப்படுத்தி அதை விரிவுபடுத்தவும், சாலைகளை அகலப்படுத்தும் பணியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளது. சீனாவில் இந்தச் செயல் எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது. அண்மையில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது. அதன்பின் சில நாட்களாக இந்திய - சீனா எல்லைப்பகுதியான டோக்லாமில் அமைதி நிலவி வந்தது.

தற்போது மீண்டும் எல்லையில் ராணுவத்தை குவிக்க சீனா தொடங்கியுள்ளது. டோக்லாம் பகுதியில் தங்களது ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோரை இறக்கி இருக்கிறது சீன அரசு. இது அந்தப் பகுதியில் அதீத போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து வெறும் 12 கிமீ தூரத்திலேயே சீனா தனது ராணுவ முகாமை அமைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் டோக்லாம் எல்லாப்பகுதியை சுத்தப்படுத்தி அதை விரிவுபடுத்தவும் தொடங்கியுள்ளது.
மேலும் இன்று காலைலயில் இருந்து அந்தப் பகுதியில் நீண்ட அகலமான சாலைகள் அமைக்கவும் தொடங்கியுள்ளது சீன ராணுவம். இந்தப் பணிகளுக்காக , நிறைய பணியாளர்களும், ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய விமானப்படை மூத்த அதிகாரி , பி எஸ் தானோவ் பேசுகையில் " சீனா டோக்லாம் எல்லையில் சாலைகள் அமைப்பது மட்டும் இல்லாமல் போர் பயிற்சியிலும் ஈடுபட தொடங்கியுள்ளது. இது மிகப்பெரிய அத்துமீறல். ஒருவேளை சீனா தாக்குதல் நடத்தினால் திருப்பி தாக்கவும் தயாராக இருக்கின்றோம்" என்றார்.
-
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
IND Vs NZ: மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை.. வாய் பேசிய சான்ட்னரை வாயடைக்க வைத்த இந்தியப் படை! -
இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில்












Click it and Unblock the Notifications