டோக்லாமில் திடீரென ராணுவத்தைக் குவிக்கும் சீனா.... மீண்டும் போர் பதற்றம்!
இந்தியா - சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் சீனா மீண்டும் ராணுவத்தை குவிக்க ஆரம்பித்துள்ளது.
டெல்லி : இந்தியா - சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் சீனா மீண்டும் ராணுவத்தை குவிக்க ஆரம்பித்துள்ளது. டோக்லாம் எல்லைப் பகுதியை சுத்தப்படுத்தி அதை விரிவுபடுத்தவும், சாலைகளை அகலப்படுத்தும் பணியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளது. சீனாவில் இந்தச் செயல் எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது. அண்மையில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது. அதன்பின் சில நாட்களாக இந்திய - சீனா எல்லைப்பகுதியான டோக்லாமில் அமைதி நிலவி வந்தது.

தற்போது மீண்டும் எல்லையில் ராணுவத்தை குவிக்க சீனா தொடங்கியுள்ளது. டோக்லாம் பகுதியில் தங்களது ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோரை இறக்கி இருக்கிறது சீன அரசு. இது அந்தப் பகுதியில் அதீத போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து வெறும் 12 கிமீ தூரத்திலேயே சீனா தனது ராணுவ முகாமை அமைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் டோக்லாம் எல்லாப்பகுதியை சுத்தப்படுத்தி அதை விரிவுபடுத்தவும் தொடங்கியுள்ளது.
மேலும் இன்று காலைலயில் இருந்து அந்தப் பகுதியில் நீண்ட அகலமான சாலைகள் அமைக்கவும் தொடங்கியுள்ளது சீன ராணுவம். இந்தப் பணிகளுக்காக , நிறைய பணியாளர்களும், ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய விமானப்படை மூத்த அதிகாரி , பி எஸ் தானோவ் பேசுகையில் " சீனா டோக்லாம் எல்லையில் சாலைகள் அமைப்பது மட்டும் இல்லாமல் போர் பயிற்சியிலும் ஈடுபட தொடங்கியுள்ளது. இது மிகப்பெரிய அத்துமீறல். ஒருவேளை சீனா தாக்குதல் நடத்தினால் திருப்பி தாக்கவும் தயாராக இருக்கின்றோம்" என்றார்.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications