மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம்...வாக்குச் சீட்டே வேண்டும் - கோரிக்கை விடுத்த 16 கட்சிகள்!
இனி நடக்கும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம். மீண்டும் வாக்குச் சீட்டு முறையையே கொண்டு வாருங்கள் என இந்த தேர்தல் ஆணையத்திடம் திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ்
டெல்லி: இந்தியாவில் இனி நடக்கும் தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 16 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன.
இந்தியா உலக அளவில் மிகப் பெரிய ஜனநாயக நாடு. அதிக மக்கள் தொகைகொண்ட நாட்டில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்கப்பதிவு நடைபெற்றால், தேர்தலை எளிதில் நடத்த முடியும். ஓட்டு எண்ணிக்கைக்கு அதிக மனித வளமும் நேரமும் செலவாகாது உள்ளிட்ட காரணங்களால் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குபதிவில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி 325 இடங்களைப் பிடித்து வரலாறு காணாத வெற்றியை அடைந்தது.
அதுமுதல், ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததால் தான் பாஜக இந்த வெற்றியைப் பெற்றது என குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டார்கள்.
அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல், அரசியல் விமர்சகர்கள், நடுநிலையாளர்கள் என பலரும் இதே குற்றச்சாட்டை கூறிவருகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் , பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 16 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையரை சந்தித்து, மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே மாற வேண்டும். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தையே பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்












Click it and Unblock the Notifications