கருப்பு பண விவகாரம்: ஹெச்.எஸ்.பி.சி.க்கு நோட்டீஸ் அனுப்பியது வெறும் துவக்கமே!
டெல்லி: கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் ஹெச்.எஸ்.பி.சி.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது வெறும் துவக்கம் தான் என்று கூறப்படுகிறது.
தங்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை ஹெச்.எஸ்.பி.சி. உறுதிபடுத்தியுள்ளது. வரி ஏய்ப்பு செய்ய பலர் ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் பணத்தை பதுக்க அனுமதித்த குற்றத்திற்காக அந்த வங்கிக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படலாம்.

ஹெச்.எஸ்.பி.சி.யிடம் இருந்து நோட்டீஸுக்கான பதில் கிடைத்தவுடன் அந்த வங்கியில் தங்களின் கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு எதிராக வருமான வரித்துறையினர் குறைந்தபட்சம் 100 புகார்கள் பதிவு செய்யவுள்ளனர். இதன் மூலம் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தில் கூடுதலாக ரூ.6 ஆயிரத்து 300 கோடியை இந்திய அரசால் மீட்க முடியும்.
தற்போது ஹெச்.எஸ்.பி.சி. வங்கி கணக்குகள் தொடர்பாக 240 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்களுக்கு சொந்தமாக சுமார் 628 கணக்குகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு இதுவரை ரூ.3 ஆயிரத்து 700 கோடி கருப்பு பணத்தை மீட்டுள்ளது. ஹெச்.எஸ்.பி.சி.யில் உள்ள 628 கருப்பு பண கணக்குகளில் 200 வெளிநாடு வாழ் இந்தியர்களின் கணக்குகள், அதுவும் அவை யாருடையது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் சில கணக்குளில் தற்போது பணம் இல்லை. அதாவது பதுக்கி வைத்திருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications