தமிழக --கேரளா எல்லை... புளியரை செக் போஸ்ட்டில் சிசிடிவி கேமரா பொருத்தம்
செங்கோட்டை: தமிழக -கேரளா எல்லையான செங்கோட்டை புளியரை செக்போஸ்ட்டில் கேமரா மூலம் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழியாக தினமும் கேரளா நோக்கியும்,கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கியும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள், பேருந்துகள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.

எப்போதும் போக்குவரத்து நடந்துவரும் இந்த சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் எறி சாராயம், அரிசி உள்ளிட்ட பொருட்களை ஏற்றி சென்று கேரள மாநிலத்தில் பிடிபடுவது வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
இந்த கடத்தலை தடுக்கும் பொருட்டு செங்கோட்டை புளியரை, செங்கோட்டை மேக்கரை ஆகிய இரண்டு சோதனை சாவடிகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்தது. அதன்படி செங்கோட்டை புளியரை சோதனை சாவடியில் 4கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதன் செயல் பாட்டை தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி, எரி சாராயம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களை ஒருகேமரா ஓட்டுனரையும், இன்னொரு கேமரா வாகனத்தின் பதிவு எண்ணையும் பதிவு செய்யும்.
அதே போல் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களை ஒருகேமரா ஓட்டுனரையும்,இன்னொரு கேமரா வாகனத்தின் பதிவு எண்ணையும் பதிவு செய்யும் வண்ணம் 4 கேமரா அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கடத்தல் சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த கண்காணிப்பு கேமராக்களை புளியரை காவல் நிலையத்தில் இருந்தும் கண்காணிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications