நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.. ஆனால் "விலங்கு"கள் பட்டியலில் "காளை" நீடிப்பு!
டெல்லி: காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட வன விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை நீக்கப்படாத போதும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா ரேஸ்) நடத்துவதற்கு அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையில் முக்கிய அம்சங்களில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழகத்தின் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரக் கூடியவை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பிராணிகள் நல ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினர். இதற்காக நீதிமன்றத்துக்கும் போய் தடை வாங்கினர்.

இதனைத் தொடர்ந்து கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், காட்சிப்படுத்தக் கூடாத வன விலங்குகள் பட்டியலில் 'காளையும்' சேர்க்கப்பட்டது. அதாவது வனவிலங்குகளான கரடிகள், குரங்குகள், புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் ஆகியவற்றைப் போல வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடையான "காளை'களையும் காட்சிபடுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தமிழக அரசு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது உரிய நிபந்தனைகளை பின்பற்றவில்லை எனக் கூறி இதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இந்த தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பப்பட்டது. இதற்காக அனைத்து கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் நேற்றைய தேதியிட்டு ஒரு அறிவிக்கையை (Notification) வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் அதாவது கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம் ஆகியவற்றுடன் வீட்டில் வளர்க்கப்படும் காளையும் நீடிக்கிறது.
- அதே நேரத்தில் பாரம்பரியமாக, கலாசார ரீதியாக காளைகளைக் கொண்டு ஜல்லிகட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயம் (ரேக்ளா ரேஸ்) ஆகியவற்றை நிபந்தனைகளுடன் நடத்தலாம்.
- ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயங்கள் பாரம்பரியமாக நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட் அனுமதியுடன் நடத்தலாம்
- மாட்டு வண்டி பந்தயமானது 2 கி.மீ. தொலைவுக்கு அதிகமாக நடத்த கூடாது.
- ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் சுற்றளவுக்குள்ள பகுதியில்தான் பிடிக்க வேண்டும்.
- போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயங்களை விலங்குகள் நலவாரியத்தினர் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications