ரூபாய் நோட்டு செல்லாது… மேற்கு வங்கத்தில் ராணுவம்.. எதிர்க்கட்சியினர் அமளி… முடங்கியது நாடாளுமன்றம்
ரூபாய் நோட்டு செல்லாது மற்றும் மேற்கு வங்கத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது.
டெல்லி: இதுவரை ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சியினர், இன்று மேற்கு வங்கத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 13வது நாளாக முடக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், பிரதமர் மோடி அவைக்கு வந்து ரூபாய் நோட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. தொடங்கிய சில நிமிடங்களிலேயே மேற்கு வங்கத்தில் ராணுவத்தை மத்திய அரசு நிறுத்தியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுப்பட்டன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களுடன் காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இணைந்து அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது, மேற்கு வங்கத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டதற்கான விளக்கத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அளித்தார். மேலும், ராணுவத்தை நிறுத்துவது வழக்கமான ஒன்று என்றும் அதனை அரசியல் செய்ய வேண்டாம் என்றும் பாரிக்க கூறினார். இதனை ஏற்க எதிர்க்கட்சியினர் மறுத்தனர். இதனையடுத்து, லோக் சபா 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் கூடிய போது, ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியால் லோக் சபாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், திங்கள் கிழமை வரை லோக் சபா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜ்ய சபாவிலும் இதே பிரச்சனை எதிரொலித்தது. காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2.30 மணி வரை ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ராஜ்ய சபா கூடிய போதும் எதிர்க்கட்சிகள் அதே பிரச்சனை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், தமிழகத்தில் உள்ள சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக் கூடாது என்று அதிமுக எம்பிக்களும் கோஷமிட்டனர். இதனால் ராஜ்ய சபாவில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜ்ய சபா திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications