கிடுக்குப்பிடி போட்ட வருமானவரித்துறை.. 16 நாட்களுக்கு பின் நகைக் கடைகளை திறந்த உரிமையாளர்
மத்திய அரசைக் கண்டித்து 16 நாட்களாக மூடப்பட்டிருந்த தங்க நகைக் கடைகள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு தங்க நகைகள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வருமானவரித் துறையினர் நகைக் கடை உரிமையாளர்களுக்கு கொடுத்த கடும் நெருக்கடியை கண்டித்து 16 நாட்களாக நகைக் கடைகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அனைத்து தங்க நகைக் கடைகளும் நேற்று திறக்கப்பட்டன.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு தங்க நகைகளை ரசீது இல்லாமல் விற்றதாக நகைக் கடை உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, தாரிபா கலான், சாந்தினி சவுக், கரோல் பாக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வருமானவரித் துறையினர் கடந்த 10ம் தேதி சோதனை நடத்தினார்கள். மேலும், நகைக் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர், ரசீது இல்லாமல் விற்கப்பட்ட நகைகள் குறித்த ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித் துறையினர் ஆய்வு செய்தனர்.
வருமானவரித் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு நகைக் கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 16 நாட்களாக கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்தினார்கள். இந்நிலையில், நேற்று நகைக் கடை உரிமையாளர்கள் தங்களது எதிர்ப்பை முடித்துக் கொண்டு கடையைத் திறந்து தங்க நகை விற்பனை செய்து வருகின்றனர்.
தங்கத்தின் விலை பொருத்தவரை, பத்து கிராம் எடையிலான சுத்தமான தங்கத்தின் விலை 1,750 சரிந்து 29,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 8 கிராம் எடை கொண்ட ஒரு சவரனின் விலை 200 குறைந்து 24,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி விலையும் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. நேற்று 1 கிலோ வெள்ளியின் விலை 3,100 ரூபாய் குறைந்து 41,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 100 எண்ணிக்கையிலான வெள்ளி நாணயங்களின் விலையும் 3,000 குறைந்தது. இதன் வாங்கும் விலை 74,000 ஆகவும், விற்கும் விலை 75,000 ஆகவும் நேற்று இருந்தது.
-
எவ்வளவு ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கினால் சிக்கல் வரும்? ரொக்கமாக வாங்கும்போது கவனிக்க வேண்டியவை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications