சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வில் 4 அதிருப்தி நீதிபதிகளுக்கு இடமில்லை! தலைமை நீதிபதி அதிரடி
உச்சநீதிமன்ற சாசன அமர்விலிருந்து அதிருப்தி நீதிபதிகள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என அட்டார்னி ஜெனரல் கே.கே.வேண
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வழக்குகள் வழிமுறைகள்படி ஒதுக்கப்படவில்லை என்றும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலையீடு அதிகளவில் உள்ளது என்றும், உச்சநீதிமன்ற நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை என்றும் உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதிகள் 4பேர் சில தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டினர்.
மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து இந்த பிரச்சனைகளை பகிரங்கமாக எடுத்துரைத்தனர்.

அதனைத்தொடர்ந்து நான்கு நீதிபதிகளும் உச்சநீதிமன்றத்தில் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டனர். இதுதொடர்பாக தலைமை நீதிபதியை அவர்கள் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு எந்த சந்திப்பும் நடைபெறாமல் இருந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் எழுந்த பிரச்சனை முடிவுக்குவந்து விட்டதாக அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அறிவித்தார். இந்நிலையில், பல்வேறு முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய 5 பேர் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பட்டியலில், தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்த 4 மூத்த நீதிபதிகளில் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இந்தநிலையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தலைமை நீதிபதிக்கும், 4 மூத்த நீதிபதிகளுக்கும் இடையிலான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரம் அலசப்படுவதாகவும், விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications