சீறிப்பாய்ந்த அக்னி ப்ரைம்.. அணுகுண்டுகளை சுமந்து செல்லும் ஏவுகணை.. கெத்து காட்டிய டிஆர்டிஓ...!
புவனேஷ்வர்: அக்னி ஏவுகணை வரிசையில் அணு ஆயுதங்களை கையாளும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய வரவான அக்னி பிரைம் வகை ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ கூறியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டிலேயே ஏராளமான அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.

ஏற்கனவே அக்னி வரிசையில் ஒன்று முதல் ஐந்து வரையிலான ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதில் 1 முதல் 3 வரையிலான ஏவுகணைகள் இந்திய ராணுவத்திலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது ஏற்கனவே 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில் 8,000 முதல் 10,000 கிலோ மீட்டர் பயணம் செய்து இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி 6 ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருகிறது. இதேபோல் தரையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள இலக்கை ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 2,000 கிலோ மீட்டர் வரை இருந்தாலும் துல்லியமாக தாக்கும் வலிமை கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது டிஆர்டிஓ அமைப்பு கூறியுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ எனப்படும் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
Recommended Video
ஏற்கனவே ஐந்து அக்னி வகை ஏவுகணைகள் சோதனை செய்து இருந்தாலும் அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அணு குண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் இந்த அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தங்கள் அமைப்பால் உருவாக்கப்பட்டது என டிஆர்டிஓ அமைப்பு கூறியுள்ளது. மேலும் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது












Click it and Unblock the Notifications