டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் சிக்கல்களை நீக்க, சந்திரபாபு தலைமையிலான குழு ஆலோசனை
மின்னணு பணப் பரிமாற்ற குழு மும்பையில் இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் மின்னணு பரிமாற்றத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அமராவதி: மின்னணு பணப் பரிமாற்ற நடவடிக்கையை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு மும்பையில் இன்று கூடி ஆலோசிக்க உள்ளது. மின்னணு பொருளாதாரத்துக்கு மாற வேண்டியது தவிர்க்க முடியாதது' என்று குழுவின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஆந்திர மாநிலம், அமராவதியில் அந்த மாநில முதலமைச்சரும் குழுவின் தலைவருமான சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கடந்த நவம்பர் 8 தேதி நள்ளிரவு அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களான 500,1000 செல்லாது என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினால் மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும், இதற்கு உரிய தீர்வு காணும் வகையில் இந்தக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும். குறிப்பாக ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை முறைக்கு மாற வேண்டியது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு மின்னணு முறை பணப் பரிவர்த்தனை சிறந்த தீர்வாக அமையும் என்று நம்புகின்றோம்.
இதனை செயல்படுத்த நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவருக்காவது மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்து கற்பிக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.
அப்போது, மின்னணு முறை பணப் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு, "மாற்றம் தவிர்க்க முடியாதது என்று கூறினார்.
மேலும், ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு இருப்பதால், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, நமது தேசம் மின்னணு பொருளாதாரத்துக்கு மாற வேண்டியது தவிர்க்க முடியாதது' என்று சந்திரபாபு நாயுடு உறுதிபட கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications