எதிரி சொத்து திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
நீண்ட காலம் நிலுவையில் இருந்த எதிரி சொத்து மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
டெல்லி: 49 ஆண்டுகால பழைமையான எதிரி சொத்து சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு லோக்சபாவில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் பிரிவினை மற்றும் 1962-ஆம் ஆண்டு சீன போரின்போது இந்தியாவிலிருந்து வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் இந்தியாவில் விட்டுச் சென்ற சொத்துகளுக்கு அவர்களது வாரிசுகள் உரிமை கோர முடியாது.
இந்திய சுதந்திரத்துக்கு பிறகு 1962 இல் நடைபெற்ற போருக்கு பின்னர் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இந்தியாவில் விட்டுச் சென்ற சொத்துகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் 1968-இல் எதிரி சொத்து சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்நிலையில் போரின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் இந்தியாவில் விட்டு சென்ற சொத்துகளுக்கு அவர்களது வாரிசுகள் உரிமை கோர முடியாத வகையில் 49 ஆண்டு பழமையான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கடந்த ஆண்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதாவானது லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையி அந்த மசோதாவை தாக்கல் செய்தபோது அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று ராஜ்ய சபா தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.
அந்த திருத்தங்களை மேற்கொள்ள லோக்சபாவின் அனுமதி பெறுவது கட்டாயம். எனவே உரிய திருத்தங்களுடன் அந்த மசோதாவானது லோக்சபாவில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவில் தங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற சொத்துகளுக்கு பாகிஸ்தான், சீனா நாட்டில் வாழும் அவர்களது வாரிசுகள் உரிமை கோர முடியாது. அதுபோன்ற சொத்துகள் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம். டெல்லி ஆகிய மாநிலங்கள் ஏராளமாக உள்ளன.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications