"காவி மயமாகும் உத்தரபிரதேசம்..." - ஹஜ் பயணிகள் தங்கும் விடுதிக்கு காவி நிற பெயிண்ட்
உத்தரபிரதேசத்தில் ஹஜ் யாத்திரீகர்கள் தங்கும் விடுதியின் சுவற்றுக்கு காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பல அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு வரும் வேளையில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் தங்கும் விடுதிக்கும் காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதிலிருந்து இந்து மத அடையாளங்களை மாநிலம் முழுவதும் நிரப்புவதில் அவர் மும்முரம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் லக்னோவில் உள்ள ஹஜ் தங்கும் விடுதியின் சுவர்களுக்கு காவி நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்களின் ஆன்மீக நிறமாக பார்க்கப்படும் காவியை, இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் விடுதிக்கு அடித்ததன் மூலமாக மனரீதியாக மத காழ்ப்புணர்ச்சிகளை மக்கள் மனதில் அவர் விதைப்பதாக எதிர்க்கட்சியினர் யோகி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத யோகி, உத்தரபிரதேசத்தையே காவி நிறத்தில் மாற்றும் பணியில் தீவிரவாக ஈடுபட்டு வருகிறார். எப்போதும் காவி உடையில் காட்சிதரும் யோகி விரைவில் எங்கும் காவி எதிலும் காவி என்று உருவாக்கி விடுவார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மதரஸாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்துள்ள யோகி, ஹஜ் விடுதியின் மீது காவி நிற அடிக்கப்பட்டுள்ளது இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications