இந்தியாவில் குழந்தைகளின் கல்விக்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா?
இந்தியாவில் கல்விக்காக மட்டும் பெற்றோர்கள் எத்தனை லட்சங்களை வாரி இறைக்கிறார்கள் என்பதை ஆய்வு ஒன்று வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதிர வைத்துள்ளது.
மும்பை: இந்திய பெற்றோர்கள் தங்கள் ஒரு குழந்தையின் பட்டப்படிப்பு வரை ரூ. 12.22 லட்சம் செலவு செய்கிறார்கள் என ஆய்வில் தெரிய வந்து உள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட கூடுதல் தொகை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்திய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் தொடக்க கல்வி முதல் இளங்கலை பட்டம் வரையில் சராசரியாக 18,909 அமெரிக்க டாலர்கள் (ரூ. 12.22 லட்சம்) வரையில் செலவு செய்கிறார்கள்.
குழந்தைகளின் படிப்புக்காக பெற்றோர்கள் தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை இழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சங்களைக் கரைக்கும் இந்திய பெற்றோர்
எச்எஸ்பிசி நடத்திய கல்வி மதிப்பு என்ற தலைப்பிலான ஆய்வு வெளியாகியுள்ளது. அதில் "இந்திய பெற்றோர்கள் குழந்தையின் படிப்பு செலவிற்கு (பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தின் கண்டனம், புத்தகங்கள், போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி உள்பட) ரூ. 12.12 லட்சம் வரையில் செலவு செய்கிறார்கள்," என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹாங்காங் பெற்றோர் செலவு
ஹாங்காங்கில் பெற்றோர்கள் குழந்தையின் படிப்பு செலவிற்கு 85 லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்கிறார்கள். இதற்கு அடுத்தப் படியாக ஐக்கிய அரபு எமிரெட்ஸில் பெற்றோர்கள் 64 லட்சம் ரூபாய் வரையிலும், சிங்கப்பூரில் 46 லட்சம் ரூபாய் வரையிலும் செலவு செய்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

ஆய்வில் 15 நாடுகள்
ஆய்வானது 15 நாடுகளை சேர்ந்த 8,481 பெற்றோர்களின் கருத்துக்களை கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஹாங்காங், இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூர், தைவான், ஐக்கிய அரபு எமிரெட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் எடுக்கப்பட்டு உள்ளது.

கடைசி இடத்தில் பிரான்ஸ்
இந்த 15 நாடுகளில் இந்தியா 13வது இடத்தை பிடித்து உள்ளது. அடுத்த இடத்தை எகிப்து பிடித்து உள்ளது. கடைசி இடத்தை பிரான்ஸ் பிடித்து உள்ளது. பிரான்ஸ் நாட்டில் பெற்றோர் குழந்தையை படிக்க வைக்க ஆகும் செலவானது 10 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கல்விச் சந்தை
எச்எஸ்பிசியின் இந்திய தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் பேசுகையில், " உலக வேலைவாய்ப்பு தொடர்பான இன்றைய போட்டி சந்தையில் கல்வியானது மிகவும் முக்கியமானது. பெற்றோர் இதனை பாராட்டுகிறார்கள்.

செலவு செய்யும் பெற்றோர்கள்
அவர்கள் கல்விக்கு பணத்தை செலவு செய்ய விரும்புகிறார்கள், குழந்தைகள் சிறப்பாக வாழ்க்கையினை தொடங்க பணமானது உதவும். குழந்தையின் கல்விக்காக பெற்றோர்கள் காட்டும் ஆதரவானது, அவர்களுடைய தனிப்பட்ட, வாழ்க்கை முறை மற்றும் நிதி தியாகங்களை காட்டுகிறது என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications