கனிமொழி, ராசா மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5-க்குள் தீர்ப்பு!
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி தெரிவித்தார்.
டெல்லி: 2ஜி வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று நீதிபதி ஷைனி தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி கைமாறியது குறித்தும் சிபிஐ துறையும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2011-ல் சிபிஐ, 2014-ல் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தன.
இவ் வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வருகிறார். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இருதரப்பும் இறுதிவாதங்களை முன்வைக்க நீதிபதி ஷைனி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ஆ.ராசா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா உள்ளிட்டோர் தமது இறுதி வாதங்களை முன்வைத்தனர். கனிமொழியும் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.
அப்போது நீதிபதி ஷைனி தெரிவிக்கையில், இரு தரப்பினரும் தங்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களின் விளக்கங்கள் வரும் ஜூலை 15-ஆம் தேதி கேட்கப்படும். அதைத் தொடர்ந்து அன்றைய தினமே வழக்கின் தீர்ப்புக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ஷைனி.
எனினும் ஜூலை 15-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு எப்போது என்று வழக்கறிஞர்கள் நீதிபதி ஓ.பி.ஷைனியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். அவ்வாறு முடியாவிட்டால் அதற்கு அடுத்த 10 நாள்களுக்குள், அதாவது செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஷைனி தெரிவித்தார்.
சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கானது இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவு வரும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications