குரங்கணி தீ விபத்து எதிரொலி: கேரளாவிலும் மலையேற்றத்துக்கு தடை
குரங்கணி காட்டுத் தீயை தொடர்ந்து கேரளாவிலும் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: குரங்கணி மலை தீ விபத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் மலையேற்றத்துக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் நேற்று முன் தினம் பயங்கர காட்டுத் தீ பரவியது. இதில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மேலும் 17 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொடைக்கானலில் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கேரளாவிலும் மலையேற்றத்துக்கு அம்மாநில அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications