மனைவியின் விருப்பமின்றி உடலுறவு கொள்ளும் கணவன்கள் மீது பலாத்கார வழக்கு?
டெல்லி: மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உடலுறவு கொண்டாலும், அதை பலாத்காரமாகவே கருத வேண்டும் என்று மத்திய அரசு நியமித்த பாம் ராஜ்புத் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது. அதேநேரம், மத்திய அரசு, இதுபோன்ற சட்டத்தை கொண்டுவர விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது.
ராஜ்புத் கமிட்டி சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திடம் அளித்த அறிக்கையில், வெளிநபர்கள் செய்யும் பலாத்காரம் மட்டுமே தற்போது பலாத்காரம் என்று கருதப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

திருமணமான பெண்ணை அவளது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொண்டால், அதை பலாத்காரமாக கருத வேண்டும் என்று சிபாரிசு செய்தது.
இதுகுறித்து அத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், திருமண பந்தத்தி்ற்குள் நடைபெறும் அத்துமீறிய உறவும் ஏற்கத்தக்கது கிடையாது. கணவன் தனது செக்ஸ் ஆசையை தணித்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உறவு கொள்வது மட்டுமின்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, செக்ஸ் கருவியாக மனைவியை பயன்படுத்திக்கொள்ளும் போக்கும் உள்ளது. அதுபோன்ற நேரங்களில் அதை சீரியசாக கருத்தில்கொள்ள வேண்டியது அரசின் கடமை என்றார்.
அதேநேரம் ஏப்ரல் மாதம், நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், ராஜ்யசபாவில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி "திருமணத்திற்குள்ளான பலாத்காரம் (marital rape) என்ற வார்த்தை, சர்வதேச அளவில் புரிந்துகொள்ளப்படும் விதத்துக்கும், நமது நாட்டில் புரிந்துகொள்ளப்படும் விதத்துக்கும் வேறுபாடு கொண்டது. இந்தியாவில் இதுபோன்ற வார்த்தை பொருந்தாது.
இந்திய சமூகத்தில், திருமணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம், மதம்சார்ந்த நம்பிக்கைகள், சமூக பொருளாத நிலை, கல்வி நிலை போன்ற பல காரணங்களால், இந்தியாவுக்கு அந்த வார்த்தை பொருந்தாது" என்று கூறியிருந்தார். இந்நிலையில் மேனகா காந்தி அதற்கு மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார். மேனகாவுக்கு, மகளிர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications