சந்தைக்கு செல்லும் விவசாயிகளுக்கு 5 ரூபாய்க்கு சாப்பாடு... ராஜஸ்தானில் புதிய திட்டம்
Subscribe to Oneindia Tamil
ஜெய்பூர்: ராஜஸ்தானில் சந்தைக்கு செல்லும் விவசாயிகளுக்கு ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக திட்டமிட்டு ராஜஸ்தான் மாநில விவசாய துறையினர், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். விவசாய துறையினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது முதலமைச்சர் வசுந்தரா ராஜே இதற்கான ஒப்புதலை வழங்கினார்.
ராஜஸ்தான் மாநில விவசாய துறை அமைச்சர் பிரபு லால் சைனி இத்திட்டம் குறித்து பேசும் போது, "முதற்கட்டமாக, கிசன் கலேவா திட்டத்தின் கீழ் 17 மொத்த சந்தைகளில் விவசாயிகளுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும். விவசாய விளை பொருட்களை விற்பதற்காக செல்லும் விவசாயிகள் ஆதாயம் பெறும் இந்த திட்டம் பின்னர் விரிவாக்கம் செய்யப்படும்"என கூறினார்.












Click it and Unblock the Notifications