அணு சக்தி விநியோகக் குழுவில் இந்தியா... ஆதரிக்க ரஷ்யாவுக்கு கோரிக்கை
உலக அளவிலான அணுசக்தி ஆதரவு குழுவில் இந்தியாவை உறுப்பினராக ரஷ்யா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அந்நாட்டை இந்தியா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லி: உலக அளவிலான அணு விநியோகக் குழுவில் இந்தியா உறுப்பினராக ரஷ்யா ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5, 6வது உலைகள் நிறுவ முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
அணு விநியோகக் குழுவில் உறுப்பினர் அந்தஸ்து கிடைக்காவிட்டால் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடனான அணுசக்தி திட்டங்களை, தொடராமல் அவற்றை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ரோகோஜின் சென்ற வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, சர்வதேச அணு விநியோகக் குழுவில் இந்தியா உறுப்பினராக, ரஷ்யா நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என, மோடி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு, டிமித்ரி ரோகோஜின், நேரடியாகப் பதில் அளிக்கவில்லை என்றும், அதற்குப் பதிலாக, இந்தியாவில் ரஷ்யா மேற்கொண்டுவரும் அணுசக்தி சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகப் பேசிவிட்டு சென்றார் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ரோகோஜின் நடவடிக்கையால், இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. அணு விநியோகக் குழுவில் உறுப்பினராக, பல ஆண்டுகளாக முயற்சித்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. உலக அளவில் அணு ஆயுத வல்லரசாக, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்தியா விரும்புகிறது.
ஆனால், ரஷ்யா இதற்கு முழு அளவில் ஆதரவு தரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, ரஷ்யா இந்தியாவில் மேற்கொண்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின், 5, 6வது உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தாகவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமானால், ரஷ்யா அணு விநியோகக் குழுவில் உறுப்பினராக்க தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று, மத்திய அரசு விரும்புகிறது.இதன்காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், 5,6வது உலைகள் நிறுவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்படாமல் தள்ளிப்போடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications