தாத்ரி முதியவர் படுகொலையைவிட சித்துவின் உடல்நிலைதான் முக்கியமோ? மோடியை சாடும் ஒமர் அப்துல்லா
டெல்லி: மதவெறியர்களால் தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் இக்லால் படுகொலை செய்யப்பட்டது குறித்து எந்த ஒரு கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்துவின் உடல்நிலை குறித்தி கருத்து தெரிவிப்பதுதான் முக்கியமா என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா சாடியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக வதந்தியை கிளப்பி இஸ்லாமிய பெரியவர் இக்லால் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.

ஆனால் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூகவலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிற பிரதமர் மோடிக்கு தாத்ரி படுகொலை இன்னும் கண்ணில்தென்படவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
What does it say about our Hon PM that Sidhu's DVT (blood clot) got more attention from him that #Ikhlaq's cold blooded murder did!!!!
— Omar Abdullah (@abdullah_omar) October 7, 2015 இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாம் சிகிச்சை பெற்றுவருவது குறித்து ட்விட்டரில் சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து, நலமுடன் திரும்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இதைக் குறிப்பிட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, பிரதமருக்கு தாத்ரி படுகொலையைவிட சித்துவிடன் உடல்நிலைதான் முக்கியமா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications