இத்தனை செய்திருக்கேன்..மீண்டும் ஜெயிப்பேன்..சுதந்திர தின உரையில் நம்பிக்கையுடன் தெறிக்க விட்ட மோடி!
டெல்லி: நான் மீண்டும் வருவேன் என்ற அர்த்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையை ஆற்றியுள்ளார்.
இன்று 72-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்தார். இது மோடியின் 5-ஆவது உரையாகும்.
அடுத்த ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் வரும் நிலையில் மோடியின் சுதந்திர தின உரை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அவர் 80 நிமிடங்கள் கொண்ட நீண்ட உரையை ஆற்றினார்.

நீண்ட பேச்சு
அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் தான் செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தான் காட்டும் ஆர்வம், அக்கறை, தீவிரம், இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது உள்ளிட்டவற்றை நீண்ட நெடிய பேச்சில் குறிப்பிட்டார்.

நம்பிக்கை
இவ்வாறு விரிவாக விளக்கமாகப் பேசியதன் மூலம் மீண்டும் அந்த 2014-ஆம் ஆண்டு நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் தான் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்ற நம்பிக்கையும் இந்தப் பேச்சின் மூலம் அவர் உணர்த்தியுள்ளார்.

ஆட்சி கட்டிலில்
தான் மீண்டும் வருவேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். மேலும் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவர் என்று கூறியிருப்பதால் அடுத்த தேர்தலிலும் பாஜகவே ஆட்சி கட்டிலில் அமரும் என்று கூறியுள்ளார்.

நத்தை வேகத்தில்
குக்கிராமங்களுக்கும் மின்சாரம், எரிவாயு உருளை, கழிப்பறைகள், வீட்டு வசதி, மேம்படுத்தப்பட்ட சாலைகள், மருத்துவ காப்பீடு ஆகியவற்றையும் பிரதமர் நினைவுக்கூர்ந்தார். மேலும் கடந்த 70 ஆண்டுகளாக நத்தை வேகத்தில் இருந்த வளர்ச்சி திட்டங்கள் மிகவும் குறுகிய காலத்திலேயே அதாவது 4 ஆண்டுகளிலேயே பாஜக அரசால் கொண்டு நிறைவேற்றப்பட்டது என்றார்.

கடைசி உரை
இத்தனை நாட்களாக பயனாளிக்கு செல்லாத மானியங்கள் தற்போது வங்கிக் கணக்கில் முறைப்படி செலுத்துவதன் மூலம் ரூ. 90 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. பொது தேர்தலுக்கு முன்பு மோடியின் கடைசி சுதந்திர தின உரை என்கிற போதிலும் அவர் எதிர்க்கட்சிகளை நேரடியாக தாக்கி பேசவில்லை.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications