இத்தனை செய்திருக்கேன்..மீண்டும் ஜெயிப்பேன்..சுதந்திர தின உரையில் நம்பிக்கையுடன் தெறிக்க விட்ட மோடி!
டெல்லி: நான் மீண்டும் வருவேன் என்ற அர்த்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையை ஆற்றியுள்ளார்.
இன்று 72-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்தார். இது மோடியின் 5-ஆவது உரையாகும்.
அடுத்த ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் வரும் நிலையில் மோடியின் சுதந்திர தின உரை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அவர் 80 நிமிடங்கள் கொண்ட நீண்ட உரையை ஆற்றினார்.

நீண்ட பேச்சு
அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் தான் செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தான் காட்டும் ஆர்வம், அக்கறை, தீவிரம், இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது உள்ளிட்டவற்றை நீண்ட நெடிய பேச்சில் குறிப்பிட்டார்.

நம்பிக்கை
இவ்வாறு விரிவாக விளக்கமாகப் பேசியதன் மூலம் மீண்டும் அந்த 2014-ஆம் ஆண்டு நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் தான் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்ற நம்பிக்கையும் இந்தப் பேச்சின் மூலம் அவர் உணர்த்தியுள்ளார்.

ஆட்சி கட்டிலில்
தான் மீண்டும் வருவேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். மேலும் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவர் என்று கூறியிருப்பதால் அடுத்த தேர்தலிலும் பாஜகவே ஆட்சி கட்டிலில் அமரும் என்று கூறியுள்ளார்.

நத்தை வேகத்தில்
குக்கிராமங்களுக்கும் மின்சாரம், எரிவாயு உருளை, கழிப்பறைகள், வீட்டு வசதி, மேம்படுத்தப்பட்ட சாலைகள், மருத்துவ காப்பீடு ஆகியவற்றையும் பிரதமர் நினைவுக்கூர்ந்தார். மேலும் கடந்த 70 ஆண்டுகளாக நத்தை வேகத்தில் இருந்த வளர்ச்சி திட்டங்கள் மிகவும் குறுகிய காலத்திலேயே அதாவது 4 ஆண்டுகளிலேயே பாஜக அரசால் கொண்டு நிறைவேற்றப்பட்டது என்றார்.

கடைசி உரை
இத்தனை நாட்களாக பயனாளிக்கு செல்லாத மானியங்கள் தற்போது வங்கிக் கணக்கில் முறைப்படி செலுத்துவதன் மூலம் ரூ. 90 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. பொது தேர்தலுக்கு முன்பு மோடியின் கடைசி சுதந்திர தின உரை என்கிற போதிலும் அவர் எதிர்க்கட்சிகளை நேரடியாக தாக்கி பேசவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications